முதல் நாள் பார்த்த போது பெரிய ‘தர்மபிரபு’. போஸ் கொடுக்கிறதை பாரேன். என்று மனதிற்குள் திட்டினாள்.
அதற்கடுத்த அடுத்த நாட்கள் பார்க்கும்போது எந்த திசையில் திரும்பினாலும் அவன் அவளையே பார்ப்பது போல் ஒரு பிரமை.
மற்றவர்கள் போல் வாய்விட்டு கிண்டல் செய்திருந்தாலாவது அவன் நினைவுகள் அத்துடன் மறைந்திருக்கும்.
மற்றவர்கள்தான் ‘நீ ரொம்ப நல்லவ’ன்னு அவளை உயர்த்திப் பார்த்துவிட்டார்களே. அவர்களோடு சேர்ந்து எப்படி அவளால் கேலியில் இறங்க முடியும்.
இல்லை. இவன் தனி.
இதே தோழிகள் மற்றவர்களைப் பற்றி கிண்டல் செய்யும்போது எதுவும் பேசாவிட்டாலும் தானும் கேட்டு ரசித்து உள்ளுக்குள் சிரித்தவள்தானே அவள்.
ஆனால் இவனைப் பற்றி பேசும் போது அப்படியில்லை.<
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்மதானே இருக்கு. அதை எடுத்து கூரை மேல் போடுங்கன்னு சொன்னுச்சு.”
‘அவன் சொல்லிவிட்டால்? செய்துவிடுவதா?’
அவளுக்குள் கோபம் பொங்கியது.
‘கூரை வேய்வதற்கு பணம் கொடுக்க முடியவில்லையாம். பெரிய தர்மபிரபு மாதிரி சொல்லியிருக்கான்.’
அவள் மனம் திட்டியதை அறிவு இடித்துரைத்தது.