(Reading time: 15 - 29 minutes)

கூல்..தேங்க்யுப்பா.குட் நைட்..

தனதறைக்கு வந்து கார்த்திக்கை அழைத்து நடந்ததை கூற அவனோ தலையை பிய்த்து கொண்டான்..இதவிட மோசமா யாரும் லவ்வ வீட்ல சொல்லிருக்க மாட்டாங்க சஹானா..என்ன பண்ணி வச்சுருக்க நீ??

ஹலோ ஆடிட்டர் சார் ரிலாக்ஸ்..எங்கப்பாவே கேஷ்வலா தான் பேசினாரு நீங்க என்னடானா இப்படி பேசுறீங்க.

சஹி…

கார்த்திக் கூல் டவுண்..ஆல் இஸ் வெல்..நிம்மதியா தூங்குங்க நாளைக்கு மாமனார்ட்ட செமயா பேசுற..கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ற..ஆல் தி பெஸ்ட் ஸ்வீட் ட்ரீம்ஸ்..

போனை வைத்தவனுக்கோ ஊர்ல எவ்ளவோ பொண்ணுங்க இருந்தும் நா ஏன் இவள லவ் பண்ணேன்னு VTV சிம்புவோட மைண்ட் வாய்ஸ் கேக்க மறுநாளின் சவாலை எண்ணி தூக்கமின்றி இரவை கழித்தான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

றுநாள் பதட்டத்தோடே உள்நுழைந்தவனை வழக்கமான புன்னகையோடே வரவேற்றார் துளசி..வாப்பா அவர் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு..

ஆக இவங்களுக்கும் தெரிஞ்சுடுச்சு..கடவுளே..இந்த குட்டிசாத்தான என்ன பண்றது ஒழுங்கா வெளில மீட் பண்ணலாம்நு சொன்னேன் வீட்டுக்கே வாங்கநு சொல்லிட்டு இவ எங்க போனா??

ஹாய் கார்த்திக்..

வந்துட்டாயா வந்துட்டா..

ஹே என்ன இங்கேயே நிக்குறீங்க வாங்க..

இவ நம்மள வச்சு காமெடி எதுவும் பண்றாளா??யார் முகத்துலயும் எந்த ரியாக்ஷனையும் காணும்..

வாப்பா கார்த்திக் உள்ளே வா-சேகர்..

உள்ளே சென்று அமர்ந்தவனுக்கு அவரை நிமிர்ந்து பார்க்கவும் தயக்கமாயிருந்தது..சார் சஹானா உங்ககிட்ட சொல்லிருப்பானு நினைக்குறேன்..

ம்ம் சொன்னாப்பா..நிஜமாவே உனக்கு முழு சம்மதமா??

சார்..

ரிலாக்ஸ் கார்த்திக்..எனக்கு உன்ன பத்தியும் தெரியும் என் பொண்ணபத்தியும் தெரியும் அவ ஒரு விளையாட்டு பொண்ணு அவளுக்கு நீங்க வேணும்ங்கிறதுக்காக உங்கள ஒரு வழி ஆக்கிருப்பாநு தெரியும்..நீ உன் மனசுல இருக்குறத வெளிப்படையா சொல்லுப்பா..

சார் நீங்க நினைக்குறமாறியெல்லாம் ஒண்ணுமில்ல..அவ விளையாட்டுதனமா இருக்குறவ தான் அதே நேரம் பக்குவமானவ கூட..எங்க ரெண்டு பேரோட முழு சம்மதத்தோட தான் உங்ககிட்ட பேசுறேன்..

தேங்க்ஸ் கார்த்திக்..உன்னவிட நல்ல பையனாவா நா பாத்துறபோறேன்..அதுவும் போக எல்லாராலயும் அவள புரிஞ்சுக்க முடியாதுப்பா..எனக்கு அவ சந்தோஷந்தான் முக்கியம்..எங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம்ப்பா..நீ வீட்ல பேசிட்டு சொல்லு..அதுமட்டுமில்லாம நா ஒத்துகிறதுக்கு இன்னொரு காரணம்….சரி அதவிடுப்பா..நீ அப்பா அம்மாட்ட பேசிட்டு சொல்லு..

தேங்க்ஸ் சார்..இந்த விஷயத்த இவ்ளோ ஈசியா புரிஞ்சுகிட்டதுக்கு..

இன்னும் என்னப்பா சார்??மாமாநு சொல்லு..

அழகாய் சிரித்தவன் அங்கிருந்து விடைபெற்று தன் வீட்டை அடைந்தான்..மோகன் அவர் அறையில் பேப்பர் படித்து கொண்டிருக்க அவர் அருகில் சென்று அமர்ந்தான்..

என்ன கார்த்தி என்ன விஷயம்??ஏன்டா என்னவோ போலயிருக்க??

அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..நா பேசுறத கேட்டு ப்ளீஸ் என்ன தப்பா எடுத்துகாதீங்க..

என்னடா ஏன் இப்படியெல்லாம் பேசுற??

அப்பா எனக்கு ஒரு பொண்ண பிடிச்சுருக்கு அவளயே கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசபட்றேன்..

கார்த்திக்!!!!!

சாரிப்பா என்னால மனச மாத்திக்க முடில அவளும் என்ன ரொம்பவே நேசிக்குறா..நம்மள நம்பி வரவங்களுக்கு நாம தானப்பா துணையாயிருக்கணும்..அவ என்ன நம்பி வந்துட்டா வாழ்க்கை புல்லா அவளுக்கு துணையா கூடவேயிருக்கனும்னு ஆசப்பட்றேன்..முடியாதுநு சொல்லாதீங்க ப்ளீஸ்,..

வாஞ்சையாய் அவனின் முன் நெற்றியை தடவியவர் என் பசங்கள நா நல்லவிதமா வளர்த்துருக்கேன்டா..உன் விருப்பத்தையும் தாண்டி என்னை மதிச்சு என்கிட்ட பொறுப்ப குடுக்குற பாரு ஒவ்வொரு பையனும் அப்பாக்கு தர வேண்டிய மரியாத இது மட்டும்தான்..என்கிட்ட எதுவுமே கேட்டதில்ல நீ முதல் தடவையா கேக்குற அத நா எப்படி மறுப்பேன் சந்தோஷமாயிருடா..என்று கூற அவர் கைகளை பற்றி கொண்டான்..

என்னதான் வீட்டிற்கு தெரியாமலும்,பெற்றவர்களின் சம்மதமில்லாமலும் நடக்கும் திருமணங்களில் திரில் இருந்தாலும்,நிதானமாய் அனைவரின் ஆசியும் பெற்று பெரியவர்களின் மனநிறைவோடு நடத்தப்படும் திருமணங்களின் திருப்தி என்பது அலாதியான சுகம் தான்..கார்த்திக் இன்று அந்த சுகத்தை உணர்ந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.