(Reading time: 15 - 29 minutes)

ரவனும் ஷரவந்தியும் விஷயமறிந்து சந்தோஷத்தின் உச்சியிலிருந்தனர்..அண்ணா நீயும் KCயும் செம பேர் நிஜமா ஒவ்வொரு நாளும் வீடு செம ஜாலியா இருக்க போகுது..என்று சிரிக்க கார்த்திக்குமே அந்த நினைவுகளில் கரைந்து போனான்..

இரவு அவளை போனில் அழைக்க முதல் ரிங்கிலேயே அட்டெண்ட் செய்து காதில் வைத்தாள்..

ஹே சஹி போனும் கையுமாவேதான் சுத்துவியா??

ம்ம் இந்த சாருக்கு இப்போ தானே பேசுறதுக்கு டைம் கிடைக்கும் அதான் காத்திட்டு இருக்கேன்..கார்த்திக் நீ ரொம்ப வொர்ஸ்ட் லவ்வரா இருக்க மார்னிங் கிளம்பும் போது என்கிட்ட சொல்லிட்டு போனும்னு கூட தோணலையா..

ஹே சாரிடா..சார் என்கூடயிருக்கும் போது உன்ன கூப்பிட்டு பேசுறது நல்லாவாயிருக்கும்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஷப்பாபாபா நல்லவனா இருக்கலாம் ஆனா அந்த நல்லவனே நா தான்ங்கிற ரேஞ்ச்ல இருக்க கூடாது..ம்ம்ம் உங்கள லவ் பண்ண வச்சு கல்யாணம் பண்ணி ரொமான்ஸ் பண்ண வைக்குறதுக்குள்ள நா கிழவி ஆய்டுவேன் அது மட்டும் கன்பார்ம்..

ஹேய் வாலு..அந்த அளவு பழம் நா இல்ல..இரண்டு சைடும் ஓ.கே ஆய்டுச்சுல இனி பாரு நீயா நிறுத்துநு சொல்ற வர ரொமான்ஸ்ஸ அள்ளி குடுத்துருவோம்..

வாவ் கார்த்திக் அங்கிள் ஓ.கே சொல்லிட்டாங்களா..ஷரவ் என்ன சொன்னா??ஹே லவ் யு லவ் யு லவ் யு..

ஹேய் கத்தாத யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க..

ஐ டோண்ட் கேர்..கார்த்திக் நீ இவ்ளோ பாஸ்ட்நு நா நினைச்சு கூட பாக்கல..அப்போ எப்போ வீட்டுக்கு பேச வரீங்க??

நாளைக்கே..ஓ.கே வா??

ஓ மை காட் யு ஆர் க்ரேஸி..நா உன்ன இப்போவே பாத்தாகனும் வரட்டுமா??

ஹே அதெல்லாம் எதுவும் பண்ணிடாத..கையும் காலையும் வச்சுட்டு சும்மாயிரு..நாளைக்கு மார்னிங் வெளில மீட் பண்ணலாம் நாங்க ஈவ்னிங் தான் வரோம் இப்போ ஒழுங்கா போய் தூங்கு..

எல்லாம் நேரம் நீ கேக்க வேண்டியத நா கேக்குறேன்..நா சொல்ல வேண்டியத நீ சொல்ற..குட் நைட்..

தன்னவளை நினைத்து சிரித்து கொண்டான்..யார் இவள்??எப்படி என்னுள் வந்தாள்??அவளை சந்தித்த முதல் தருணம் நினைவிற்கு வந்தது சேகரின் வீட்டிற்கு செல்லும் முந்தைய நாள் ரயில் நிலையத்திற்கு தன் நண்பன் ஒருவனோடு சென்றிருந்தான்..நண்பன் டிக்கெட் கவுண்ட்ர்க்கு செல்ல அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்..அவனுக்கு சற்று தள்ளியிருந்த ஒரு பெண் முகத்தில் தீவிர யோசனையோடு அங்குமிங்கும் யாரையோ பார்த்து கொண்டிருந்தாள் முகத்தில் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் அவளிடம் ஏனோ அவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது கார்த்திக்கிற்கு..அதன்பின் அன்றைய வேலைகளில் அதை சற்று மறந்தும் போனான்..ஆனால் மறுநாள் அதே தேவதை கண்களில் குறும்பு மின்ன தன்னிடம் பேசியதை கண்டு மொத்தமாய் தவித்துதான் போனான்..அவளை முதன்முதாலாய் தன் பைக்கில் அழைத்து சென்றது,அவளோடு அந்த மாலில் செலவிட்ட பொழுதுகள் என அனைத்தும் ரசித்து ரசித்து பாதுகாத்தான்..திருமணத்திற்கு பின் தன் மொத்த காதலையும் அவளிடம் கொட்டி தீர்க்க தயாராகி கொண்டிருந்தான்.

கைபேசி அழைப்பில்  அவனின சிந்தனை கலைந்து அதை கையில் எடுக்க அவனது நண்பன் ஷ்யாம் அழைத்திருந்தான்..

ஹலோ சொல்லுடா நானே உனக்கும் கிஷோருக்கும் பண்ணணும்னு இருந்தேன்..

எதுக்கு உன் லவ் மேட்டர சொல்றதுக்கா??-கிஷோர்

டேய் நீயும் லைன்ல இருக்கியா ஆமா அதெப்படி உனக்கு தெரியும்???

ம்ம்ம் கடல போடுறத விட்டுட்டு கொஞ்சம் பேஸ்புக் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கண்டுக்கனும்..பரவால்ல இந்த விஷயத்துல என் தங்கச்சி உன்னமாறியில்ல..-ஷ்யாம்

டேய் என்னடா சொல்றீங்க??

ம்.ம் உன் லவ் ஊருக்கே தெரிஞ்சுடுச்சுநு சொல்றோம் அதுவும் சும்மா இல்லப்பா காட் என்கேஜ்ட்னு போட்டுருக்கா சஹானா..கல்யாணத்துக்காவது கூப்டுவியா இல்ல எப்படி??

ஐயோ அவளால சும்மாவே இருக்க முடியாதுடா எப்போ பாரு இதே வேலையா போச்சு..

பட் கார்த்திக் யு கைஸ் வில் மேக் அ பெஸ்ட் பேர்டா..ஹார்ட்டி விஷ்ஷஸ்..-ஷ்யாம்

தேங்க்ஸ் மச்சி நாளைக்கு தான் பேச போறோம் டேட் பைனலைஸ் ஆனவுடனே சொல்றேன் கண்டிப்பா வரீங்க..

இன்னும் சில விஷயங்களை பேசிவிட்டு படுக்க சென்றான் கார்த்திக்..ஏதேதோ காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் புரியவில்லை அவனுக்கு தெளிவாகவும் இல்லை..படுக்கையில் இருப்பவனுக்கு உடலெங்கும் வியர்த்து கொட்ட இறுதியாய் தெரிகிறது அவனின் சஹியின் முகம் அலறிஅடித்து எழுந்தமர்ந்தான்..தன் அறையில்தான் இருக்கிறோம் என்பதை உணரவே நேரமெடுத்தது..என்றுமே இப்படியொரு கனவு கண்டதில்லை அவன்..எவ்வளவு முயன்றும் எந்த காட்சியுமே நினைவிற்கு வரவில்லை..தனக்கு தானே ஏதேதோ சமாதானம் கூறிகொண்டு கடவுளை வேண்டிக் கொண்டு தூங்க முயன்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.