(Reading time: 8 - 15 minutes)

ரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்…..”

குளியலறையில் இருந்து இனிய குரலோசை கேட்க,

“ஆரம்பிச்சிட்டாப்பா…..” என்றாள் ரித்தியின் தோழி ஸ்வேதா….

குளித்துமுடித்துவிட்டு வெளியே வந்த ரித்தியினைப் பார்த்து முறைத்தபடி,

“ஏய்… ரித்தி… இன்னைக்கும் காலையிலேயே உன் பஜனையை ஆரம்பிச்சிட்டியா?...” என்றாள்…

“ஏய்… என்ன வேதா… கொழுப்பா?...”

பதிலுக்கு முறைத்தபடி கேட்டாள் ரித்தி…

“கொன்னுடுவேன்… உன்னை… எப்போ பாரு, வேதா, வேதான்னு கூப்பிட்டுகிட்டு…. முழுப்பேரையும் சொல்லி கூப்பிட்டா தான் என்னடி?...”

“அஸ்க்கு… புஸ்க்கு…. நான் இப்படித்தான் கூப்பிடுவேன்….”

“ம்ம்… இதை மட்டும் ஷார்ட்டா கூப்பிடு… ஆனா உன் பஜனையை மட்டும் முழு நீளத்துக்கு தினமும் வச்சிடு…. கொடுமைடி ஆனாலும் நீ பண்ணுறதெல்லாம்…”

“ஹாஹா… எல்லாம் உன் ஆசீர்வாதம் வேதா….”

புன்னகைத்துக்கொண்டே கூறிய ரித்தியின் முதுகில் ஓங்கி ஓர் போடு போட்டாள் ஸ்வேதா…

“ஸ்… ஆ… வலிகுத்துடி… குரங்கே…”

“வலிக்குதா வலிக்கட்டும்… நீ மட்டும் டெய்லி என் காதை வலிக்க வைக்குறல்ல… அப்போ எனக்கும் அப்படித்தான இருக்கும்…”

“ஹாஹா… உனக்கு பொறாமை வேதா… பொறாமை… என்னடா நம்மளை விட அழகா இனிமையா ஒருத்தி பாடுறாளேன்னு உனக்கு பொறா………மை……டி….”

முகத்தை சுளித்துக்கொண்டே கண்களை உருட்டியபடி கூறிய ரித்தியினை பார்த்து கோபமாக முறைத்தாள் ஸ்வேதா…

“காலையிலேயே இப்படி கண்ணு வைக்காதடி… குரங்கே…”

“அடிங்க… நானும் போனா போகுதுன்னு விட்டா, நீ ரொம்ப ஓவரா தான் போயிட்டிருக்கடி… இதெல்லாம் உன் முதுகுக்கு கொஞ்சம் கூட நல்லதில்லை சொல்லிட்டேன்…”

“ஓஹோ… அப்புறம்… வேற?...”

இடுப்பில் கைவைத்து கேட்ட ரித்தியை மேலும் கீழுமாக பார்த்தாள் ஸ்வேதா…

“மறுபடியும் என்ன லுக்கு?...”

ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி கேட்ட ரித்தியின் மீது தலையணையை தூக்கி எறிந்தாள் ஸ்வேதா…

சட்டென அதை பிடித்துக்கொண்டவள், “வேதா… நீ அவுட் டீ…” என பல்லைக்காட்ட, அவளின் மீது தண்ணீரினை எடுத்து ஊற்றினாள் வேகமாக…

நனைந்த மலராக இருந்தவளை பார்த்து ஸ்வேதா சிரிக்க,

“அடிப்பாவி… குரங்கே… குரங்கே… என்னை மறுபடி குளிக்க வச்சிட்டியேடி…” என புலம்பிய ரித்தி,

“இப்போ உன்னை என்ன பண்ணுறேன் பாரு?...” என அடிக்க போக முயல, ஸ்வேதா அந்த அறையினுள் அங்கும் இங்கும் ஓடினாள்…

“ஏய்… தப்பிக்கலாம்னு மட்டும் நினைச்சிடாதடி… இன்னைக்கு உன்னை கொன்னுட்டு தான் மறுவேலை எனக்கு… இருடி… எங்கடி ஓடுற…”

“காலங்கார்த்தால தூங்க விடாம பாடி கொல்லுறல்ல… ஓடு… நல்லா ஓடு…. அப்படித்தான்… எங்க வா… பிடி பார்க்கலாம்…”

ஸ்வேதா அவளைக் கேலி செய்ய,

முழு வேகத்துடன் அவளைப் பிடிக்க ஓடிய ரித்தி, அவள் தப்பித்து ஓடுவதைப் பொறுக்கமாட்டாது கோபத்தோடு மூச்சிரைக்க, தன் ஓட்டத்தை நிறுத்தி அவளைப் பார்க்க, அவளோ வயிற்றினைப் பிடித்து சிரித்துக்கொண்டிருந்தாள் கலகலவென…

ஸ்வேதா தன் கண்களை மூடிய சில நொடியில், பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவளின் மேல் ரித்தி ஊற்றிவிட, இப்போது சிரிப்பது ரித்தியின் முறையானது…

“ரித்தி கொத்தி…. உன்னை…. என்னப் பண்ணுறேன் பாரு…”

பல்லைக்கடித்து ஆங்காரத்தோடு கத்தியபடி, ரித்தியை நோக்கி தண்ணீரை எடுத்து ஊற்றினாள் ஸ்வேதா…

அந்த நேரம் சட்டென ரித்தி அகல, ஸ்வேதாவின் விழிகள் விரிய,

ரித்தியோ சுவரோடு சாய்ந்து நின்று “அய்யோ அம்மா, வயிறு வலிக்குதே… தாங்க முடியலையே…” என்று சிரித்துக்கொண்டிருக்க,

ஸ்வேதாவின் விழிகளோ பயத்தில் உள்ளே போயிருந்தது எதிரே நின்ற உருவத்தினைப் பார்த்து…

ஹாய் ப்ரெண்ட்ஸ்…

எப்படி இருக்கு முதல் அத்தியாயம்?...

கொஞ்சம் சின்ன எபிசோட் தான்… அடுத்த வாரம் அதிக பக்கங்கள் தருகிறேன்…

இதுவரை தொடர்ந்த உங்களின் கருத்துக்களும், ஆதரவுகளும் இக்கதைக்கும் தருவீர்கள் தானே….

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்…..

மீண்டும் அடுத்த வாரம் பூக்கும் புது எழில் வானில் சந்திக்கலாம்…

நன்றி…

எழில் பூக்கும்...!

Episode # 02

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.