முத்துமுத்தாய் நீரெதற்கு நானில்லையோ கண்ணீர்துடைப்பதற்கு
என்னைவிட்டால் யாருமில்லைமில்லை கண்மன்னியே உன்னை கை அணைக்க”.. என்று பாட்டின் மூலம் சமாதானம் செய்ய முயன்றான்.
உன்மனதை, உன்னைவிட எனக்குத்தான் ரொம்பத் தெரியும் ஏனென்றால் உன் ஒவ்வொரு அசைவின் அர்த்தங்களும் எனக்கு அத்துபடி நீ என்னவள் ழையா என்று அவளில் தோளின் மேல் கை போட்டு தன்னுடன் சேர்த்து நடத்தி கூப்பிட்டுவந்தவன்
அவள் உட்காருவதர்காக சேரை இழுத்து உட்கார் பேபி என்று கூறி அவள் உட்கார்ததும் அவளின் அருகில் தானும் உட்கார்ந்தான்.
பரிமாற வந்த கஸ்த்தூரியிடம் நீ போ கஸ்தூரி நாங்களே போட்டு சாப்பிடுக்கிடுவோம் என்றான்.
கவிழையா இயல்பாக அவனுக்குத் தேவையானதை எல்லாம் அவன் தட்டில் பரிமாறிவிட்டுத் தனக்குத் தேவையானதை தானும் எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்
அவளின் அச்செயல் மஹிந்தனின் மனதில் சாரலை பொழிந்தது. அந்த நேரம் அங்கு வந்த கதிரை பார்த்தவன், வா கதிர் நீயும் வந்து சாப்பிட்டு என்றதும் நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் வெளியே ரிப்போர்டர்கள் வந்துவிட்டார்கள் அதை சொல்லத்தான் வந்தேன் என்றவனிடன், ஒரு ஐந்து நிமிடம் அவர்களை உட்காரவை நாங்கள் வந்துவிடுகிறோம் என்றான்.
ழையாவிற்கு டென்சனில் சாப்பாடு தொண்டையில் இறங்க மறுத்தது.அவளின் அவஸ்த்தைப் பார்த்தவன் ரிலாக்ஸ் பேபி அவசரமில்லாமல் சாப்பிடு என்றவன் உனக்கு பயம் தேவையில்லை நீ என் அருகில் இருக்கும் போது பயம் எதற்கு உன்னை யாரும் எந்த கேள்வியும் கேட்காதவாறு நான் பார்த்துகொள்கிறேன் என்றவன் அவள் கை பிடித்து நிரூபர்களை சந்திக்கவந்தான்
அவர்கள் வாசலுக்கு வரும் போதே பளிச் பளிச் என்ற கேமராக்களின் ஒளியில் அவள் மிரண்டு அவனின் கையை இருக்கப் பற்றி அவனுடன் நெருங்கி நடந்தாள் அப்பொழுது ழையா பிளீஸ் கொஞ்சம் சிரித்தது போல் முகத்தினை வைத்துக்கொள் என்று குனிந்து அவள் காதின் அருகில் அவளுக்கு மட்டும் கேட்கும்படிசென்னவன்.
. நிருபர்களிடம் கவிழையாவிடம் கை பற்றி காண்பித்து இது என் மனைவி கவிழையா. சந்தர்பம் காரணமாக யாருக்கும் கூறாமல் எங்களின் கல்யாணம் முடிந்துவிட்டது சோ! உங்களுக்கு என் திருமணம் நடந்த விஷயத்தை அறிவிப்பதற்காக இந்தக் கூட்டத்தை நான் கூட்டியுள்ளேன் ஏனெனில் என் மனைவிக்கு நான் கார் திறந்துவிடுவத்தையும் உடன் வெளியில் செல்வத்தையும் நீங்கள் தவறுதலான உறவு என்று பிரகனப்படுத்துவதை தவிர்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்று கூறினான்.
அவன் அவ்வாறு கூறியதும் ஒரு நிரூபர் உங்களுக்கும் மிஸ் ஐஸ்வர்யாவிர்க்குமான பிரிவிற்கு உங்களிடம் செக்ரட்டரியாக வேலை பார்த்து தற்போது மனைவியாக ஆன கவிழையா தான் காரணம் என்கிறார்கள் அது உண்மையா? என்று கேட்டார்.
அவன் அவ்வாறு கேட்டதும் கட்டாயமாக இல்லை நான் மிசஸ் கவிழையா மஹிந்தனை கல்யாணம் முடிக்காமல் இருந்திருந்தால் கூட கட்டாயம் ஐஸ்வர்யாவினுடனான என் கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்.
மேலும் தன் வீட்டில் நிச்சயித்திருந்த ஐஸ்வர்யாவிற்கும் தனக்கும் இடையில் காதல் ஒன்றும் மலரவில்லை என்றும் கூறினான், மேலும் ஐஸ்வர்யாவும் வேறு ஒருவனை விரும்புவது தனக்குத் தெரியவந்துள்ளது கூடிய சீக்கிரம் ஐஸ்வர்யாவிர்க்கும் அவளின் காதலனுக்கும் கல்யாணம் நடக்கும் என்றும் கூறினான்.
என் மனைவி கவிழையா மென்மையானவள் என்று கூறி தன் அருகில் அவளின் கை பிடித்து நெருங்கியபடி நிண்று கொண்டு நான் தான் கவிழையாவின் மேல் காதல் கொண்டு துரத்தி துரத்தி காதலித்து கல்யாணம் முடித்துள்ளேன் raanஎன்றான்.
உங்களின் திருமணத்தை இருவர் வீட்டிலும் ஏற்றுக்கொண்டார்களா? என்று கேட்டான் ஒரு நிரூபர்.
இதற்கான பதில் கூடிய சீக்கிரம் இருவரின் வீட்டு சார்பாக நடக்கும் எங்களின் திருமணவரவேற்பில் இருந்து தெரிந்து கொள்வீர்கள், என்று கூறி புகைப்படத்திற்கு ழையாவுடன் கை கோர்த்து போஸ் கொடுத்து தன் பேட்டியை முடித்து கொண்டான்.
கவிழையாவிற்கு நிரூபர்களுக்கிடையில் நின்று கொண்டு இருப்பதுவும் பளிச் பளிச் என்று விழுந்த கேமராக்களின் ஒளியும் அவளை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளும் மிரட்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவளை அறியாமலேயே மஹிந்தனின் அருகில் நின்றுகொண்டு அவனின் கையை இறுக்கமாக பிடித்து தன் பயத்தையும் நடுக்கத்தையும் சமாளிக்க முயற்சிசெய்து கொண்டு இருந்தாள்.
மஹிந்தனுக்கு அவளின் நெருக்கம் சந்தோசத்தை கொடுத்தது மஹிந்தனும் அவளை ஆதரவாக தன் அருகில் நெருங்கி நிறுத்திக்கொண்டு அவளுக்கு தைரியம் கொடுத்து அதில் வெற்றியும் கண்டான்.