(Reading time: 10 - 19 minutes)

பெரிய இவன் மாதிரி பக்கத்தில்  வந்தான். அப்ப  குடுக்க வேண்டி தான பார்ததுட்டே இருக்கான். அதனால தான்  நானே தந்தேன்.

சரியான சாமியார். நானும் எத்தனை நாளா  இந்த லூசுமாமா பின்னாடியே சுத்துறேன் . கொஞ்சமாவது அத்தை  பொண்ணு என்று ஆசை இருக்கா இல்லை  ஒரு அழகான பொண்ணு என்று ஸைட்டாவது  அடிச்சிருக்கானா. அவன் கிட்ட கேட்டால்  அழகான பொண்ணா  அது யாரு என்று    கேட்பான். சரியான திமுரு  பிடிச்சசவன்

அப்படி செய்யலாமா நீ என்று மனசாட்சி கேள்வி எழுப்பியது. ஏய்  போ என் மாமா நான் என்ன வேணும் என்றாலும்  செய்வேன். நானும் ஒண்ணும் அப்படி நடக்கும் என்று நினைக்கவே இல்லை. அத்தனை பக்கத்தில் பார்த்த உடனே என்னையே அறியாமல் தான் நடந்து விட்டது

ஆனால்  வேண்டாம் என்றால்  தள்ளி விட்டுறுக்க  வேண்டியது தானே அந்த அளவுக்கா அவனை விட நான் பலசாலியா இருக்கிறேன் அப்ப  எப்படி அமைதியா நின்றான். அப்ப  அவனுக்கும் பிடித்து தானே இருக்கிறது. பொறு மச்சான் உனக்கும் என்னை பிடிக்கும் என்று உன் வாயாலே வர வைக்கவில்லை  நான் கீர்த்தி இல்லை.

ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தான் கீர்த்தி. சப்புனு அடி தந்திருந்தால்  என்ன செய்திருப்ப. ஹ்ம் வாங்கி இருப்பேன் வேற என்ன. இந்த அபர்ணா லூசு கிட்ட வேற பொய் சொல்லிவிட்டேன்  நாளைக்கு கேள்வி கேட்பாள்  என்ன சொல்லி சமாளிக்கவோ தெரியவில்லை.

இன்னும் இவங்க வரலை  என்று யோசித்து கொண்டு அமைதியாக இருந்தாள். பசி வேற,  சீக்கிரம் வாங்களேன் டா  தடியங்களா என்று புலம்ப வைத்தது

ங்கு கடைக்கு போன உடனே வினோத் ஆர்டர் செய்த உணவு வகைகளை பார்த்த கார்த்திக் வினோத்தை  முறைத்தான். ஏன்  டா  இது தான் சாக்கு என்று  என் பர்ஸை  காலி பண்ணலாம் என்று நினைக்கிறியா இப்ப தானே  என்கூட சேர்ந்து சாப்பிட்ட. மறுபடியும் பசிக்குதா இவ்வளவு சாப்பாடு சொல்லிக்கிட்டு இருக்க.

உனக்கு என் மேல நல்ல எண்ணமே வராதா டா  இது எல்லாம் உன் அருமை பொண்டாடிக்கு தான். பர்ஸ  காலி பண்றாங்களாம். உன் பர்ஸ காலி பண்ணனும் என்றால்  பியர் வாங்கி காலி பண்ணுவேன். சாப்பாடு எப்பவும் என்னோட செலவு தான். இதுக்கும் நானே பில் குடுத்து விடுகிறேன்.

பியர் குடிக்ககூடாது என்று எத்தனை தடவை சொன்னாலும் அறிவு வராதா  உனக்கு. அதுக்கு நீ  தின்ணே என் பர்ஸ  காலி செய்தால்  கூட சந்தோசம்   தான். இத்தனை தின்று விட்டு  செமிக்க  தான் இஞ்சி மிட்டாய் கேட்டாள் போல டா பார்த்தாயா என் நிலைமையை  இன்று தான் முதல் நாள். அதற்குள்  எத்தனை தடவை என்னை அலற வைத்து விட்டாள் பார்த்து விட்டாயா பயமாக இருக்கிறது டா. இவளால் எனக்கு இதயமே வெடித்து விடும் போல

ஹ்ம் கொஞ்சம் கஸ்டம் தான். ஆனால்  இன்னோசன்ட் டா அவள். மாவை கொட்டிகிட்டு எப்படி நின்றாள் பாரு எனக்கு இன்னும் சிரிப்பா  வருது . அவன் புன்னகை கார்த்திகையும் தொ ற்றி  கொண்டது.

இன்னோசென்ட் இல்லை  டா இரீடேட்டிங் இடியட் என்றான் கார்த்திக் 

வீட்டுக்கு வந்தவுடன் அவன் கேட்டது ஏண்டி  என் சொத்தை தின்ணே அளிக்க போறியா. நைட் இப்படியா சாப்பிடுவாங்க. கொஞ்சம் தான் சாப்பிடணும் என்று தெரியாதா 

விடுங்க அத்தான் அதை எல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம் கொஞ்சம் உங்கள் அறிவுரை மழையை ஆரம்பித்து விடாதீர்கள். என்ன நிறைய சாப்பிட்டால் குண்டா தானே  ஆவேன். கல்யாணம் ஆகாத பொண்ணுங்க தான் குண்டா இருந்தா மாப்பிளைக்கு பிடிக்காதோ என்று  கவலை  பட வேண்டும் . எனக்கு தான் நீங்க இருக்கீங்களே அப்றம் என்ன

என்னை இளிச்ச  வாயன்  என்று  சொல்ற அப்படி தானே

ஐஐயோ  இல்லை அத்தான்  உங்களை போய் அப்படி சொல்வேனா என்று சொல்லி நமட்டு  சிரிப்பு சிரித்தாள்.

இத்தனை நாள் மாமா என்று  தானே கூப்பிடுவாய் இப்ப  என்ன அத்தான்.

அதுவா இன்று  முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் நடந்தது அதனால தான் என்று சொல்லி அவனை பார்த்து கண்ணடித்தாள்

முத்தம் குடுத்தத்தை சொல்கிறாள் ராட்சஸி என்று மனத்தில் நினைத்து பல்லை கடித்தான்.

அவள் சொன்னவுடன் வினொத்துக்கும் புரிந்து விட்டது. அவனும் சிரித்தான். வினோத் சிரித்ததை கீர்த்தியும் கவனித்தாள்

கார்த்திக் சும்மா கிடக்காமல் எதுக்கு லூசு உன் ப்ரெண்ட்  கிட்ட அப்படி சொன்ன.  பொய்  சொல்றதெ தப்பு இதில் நீ  அப்படி பட்ட விசயம் எல்லாம்  சொல்லலாமா அறிவே இல்லையா  உனக்கு.

உங்களுக்கு மட்டும் அறிவு இருக்கா  மாமா

ஏய்  என்ன திமுரா  நான் என்ன செஞ்சேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.