(Reading time: 13 - 26 minutes)

“என்ன சொல்ல வர்றீங்க? புரியற மாதிரி பேசுங்க?”

மஞ்சரி அவள் அழும் காரணம் புரியாமல் எரிச்சல்பட்டாள்.

“கொஞ்சம் பேசாம இருக்கியா மஞ்சு. அவங்க சொல்வாங்க.”

நேசமலர் அவளை அதட்டினாள்.

“நான் ரொம்ப மோசமானவ. என்னை மாதிரி ஒரு மோசமான அம்மா இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது.”

முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

சற்று நேரம் அவள் அழட்டும் என்று அவர்கள் அமைதியாயிருந்தனர்.

அவளே ஒருகட்டத்தில் அமைதியானாள்.

அவள் பேச ஆரம்பித்ததும்தான் அவளது அழுகைக்கு தாங்கள் எப்படி காரணமாயினோம் என்று அவர்களுக்குப் புரிந்தது.

ராதாவின் தாய் அவர்களது பெற்றோருக்கு ஒரே பெண். வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டனர். எந்த வேலையும் செய்தது கிடையாத

...
This story is now available on Chillzee KiMo.
...

எடுத்து யாருக்கோ அழைத்தாள். அந்தப் பக்கம் எடுத்ததும் அழ ஆரம்பித்தாள்.

“அத்தான்! என்னை மன்னிச்சிடுங்க அத்தான். எனக்கு உங்களைப் பார்க்கனும் போல இருக்கு. நீங்க ஊருக்கு வந்துடுங்க அத்தான். நாம எல்லாரும் ஒரே இடத்தில் இருக்கலாம். அத்தை மாமா எல்லாரையும் இங்கே அழைச்சுட்டு வந்துடுங்க அத்தான்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.