“நான் பார்த்துக் கொள்கிறேன். அவங்களை காத்திருக்கச் சொல்” என்றுவிட்டு ஐ சி யு சென்று விட்டான்.
“மிசஸ் ராம். டாக்டர் ரவுண்ட்ஸ் போயிருக்கார். நீங்கள் இங்கேயே காத்திருங்கள். அவர் வந்த்தும் உங்களை கூப்பிட்டு பரிசோதனை செய்வார்” லிசி கூறிவிட்டு சென்று விட்டாள்.
சிறிது நேரம் சென்ற பின் மருத்துவமனை சிப்பந்தி ஒருவர் அவள் அருகில் வந்து மிசஸ் ராம் அவளா என்று கேட்டார்.
ஆம் என்று சொன்னதும் ஆறாவது தளத்தில் டாக்டர் கணேஷின் அறைக்கு செல்லுமாறு அவளிடம் சொல்லி வழியையும் கூறினார்.
அந்த தளத்தில் மொத்தம் ஐந்தாறு அறைகள் இருந்தன. அதில் கடைசியில் இருந்த அறைக்கு முன் பெயர்பலகையில் டாக்டர் கணேஷ் ராம் கார்டியாக் சர்ஜன் என்று எழுதியிருந்தது.
தங்க நிறத்தில் ஜொலித்த அந்த எழுத்துக்களை ஆசையாக வருடினாள்.
“ராம்” என்று கூறியவள் கண்மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள்.
லேசாக கதவை தட்ட கதவு தானாக திறந்து கொண்டது. மெல்ல எட்டிப் பார்க்க அந்த விசாலமான அறையில் ஒருவரும் இல்லை.
“கதவை திறந்து போட்டுட்டு இந்த ராம் எங்க போயிட்டான்” மனதில் நினைத்தை சற்று உரக்கவே சொல்லிவிட்டிருந்தாள்.
அடி மேல் அடி வைத்து அவள் அறைக்குள் வரவும் கதவு தானே மூடிக் கொள்ள கிளிக் சத்தம் கேட்டது.
ஒரு கணம் திடுக்கிட்டு கதவை நோக்கித் திரும்பியவள் இதயம் தாறுமாறாக துடித்தது. மறுகணம் அவள் காற்றில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள்.
பிரன்ட்ஸ் வெரி வெரி சாரி. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் மிகச் சிறிய எபி தான் கொடுக்க முடிந்தது. கண்டிப்பாக இதை வரும் எபிகளில் ஈடு செய்து விடுவேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து வேண்டுகிறேன்
இதயம் துடிக்கும்
{kunena_discuss:1109}