Un Idhayam Pesugiren - Tamil thodarkathai
Un Idhayam Pesugiren is a Family / Thriller / Suspense genre story penned by Sreelekha D.
This is her second serial story at Chillzee.
-
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 16 - ஸ்ரீலேகா D
“கார் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்மா.” நிரவி புதுக் கரை ஆசையுடன் தடவி பார்த்துக் கொண்டே சொன்னாள்.
“சாட்டர்டே சண்டே இனிமேல் எங்கே வேணா போகலாம்மா.” ஈஷானும் தன் பங்கிற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
சமீபத்தில் நடந்த
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 17 - ஸ்ரீலேகா D
கைக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டு ஓடாத குறையாக டே கேர் இருந்த கட்டிடத்தினுள் நுழைந்தாள் பூர்வி. டே கேர் எட்டு முப்பது மணி வரைக்கும் தான் இயங்கும். இப்போதோ மணி எட்டே முக்காலை நெருங்கி இருந்தது. பூர்வி நேரத்திற்கு அலுவலகத்தில்
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 18 - ஸ்ரீலேகா D
“உங்களை தொந்தரவு செய்ய எனக்கு விருப்பம் கிடையாது. இந்த மீட்டிங் ரொம்ப முக்கியம். நான் வர ரொம்ப லேட் ஆயிடும். இப்போ உடனே உதவி செய்ற மாதிரி வேற யாரும் பக்கத்துல இல்லை.” பூர்வி ரொம்பவும் தயக்கத்துடன் அனிலிடம் அந்த உதவியைக்
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 19 - ஸ்ரீலேகா D
பூர்வி இறுதியில் வீடு செல்ல கிளம்பியப் போது, நேரம் பதினொன்றரையை கடந்திருந்தது. பூர்வி மாதவியிடம் பேசி தாமதமாவதைப் பற்றி தகவல் பகிர்ந்திருந்தாள். பிள்ளைகளும் அப்போது அம்மாவுடன் பேசி இருந்தார்கள். அவர்கள் நலமாக இருப்பதே பூர்விக்கு அமைதியைக்
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 20 - ஸ்ரீலேகா D
முதல் முறையாக பூர்விக்கு அனிலை பார்த்தது நிம்மதியைக் கொடுத்தது. அவளுக்கு அவன் மீது நல்ல அபிப்ராயம் இல்லை, அவனை பிடிக்காது என்பது எல்லாம் இப்போது முக்கியமாக படவில்லை. ஆறுமுகத்தை அனில் பார்த்துக் கொள்வான் என்று
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 21 - ஸ்ரீலேகா D
ராகுல் புறப்பட்டுச் சென்று சில மணி நேரங்கள் ஆனப் பிறகும், அவர்கள் நடுவே நடந்த உரையாடலை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள் பூர்வி. ராகுல் என்னவோ அவள் சொன்னதை பெரிது படுத்தாமல் உடனே கிளம்பி விட்டான். ஆனால், யோசிக்க யோசிக்க பூர்விக்கு தான்
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 22 - ஸ்ரீலேகா D
அவளும் இரண்டு நாட்களாக முயன்றுக் கொண்டு இருக்கிறாள் ஆனால் மனதை ஒரு நிலை படுத்த முடியவில்லை. இரண்டு இரவுகளையுமே சரியாக தூங்காமல் தான் கழித்திருந்தாள். சின்ன சின்ன சத்தம் கூட அவளை திகிலடைய செய்திருந்தது. மொத்தத்தில் முகம் தெரியாத இந்த மனிதன் பூர்வியை பயமுறுத்துவதில் முதல் முறையாக முழு வெற்றிப்
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 23 - ஸ்ரீலேகா D
பூர்வியின் கூர்மையான மூளை விழித்துக் கொண்டது. இவன் எந்த பிரச்சனையை பற்றி சொல்கிறான்? பூர்வியின் விழிகளில் சந்தேகம் தோன்றிய உடனேயே அனில் எழுந்து ஒன்றிரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
-
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 24 - ஸ்ரீலேகா D
ராகுல் பூர்வி மெய் சொல்கிறாளா, பொய் சொல்கிறாளா என்று சோதிப்பவனாக தன்னுடைய கூர்மையான கண்களால் ஆராயும் பார்வை பார்த்தான். பூர்விக்கு விபரம் புரியவில்லை. இருந்தாலும் ராகுலின் கேள்விகளுக்கும், பார்வைக்கும் பின்னால் வேறு காரணம் இருக்கிறது என்ற அளவுக்கு அவளால் ஊகிக்க
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 25 - ஸ்ரீலேகா D
“நன்றி பூர்வி. உங்க வார்த்தைங்க உண்மையாவே என் மனசை மகிழ்ச்சிப் படுத்தி இருக்கு.”
“ரொம்ப நல்லது! இன்னைக்கு உங்க பிறந்தநாள். அதனால மகிழ்ச்சி தர விஷயங்களை மட்டும் யோசிங்க. நீங்க ஒரு கல்யாணம் செய்து உங்க வாழ்க்கையில செட்டில் ஆகலாமே?”
“என் அப்பா அம்மாவை பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 26 - ஸ்ரீலேகா D
ஆயினும் அதை தாண்டி வேறு ஒரு கேள்வி அவளை இப்போது ஆட்கொண்டது! அனில் எப்படி சரியாக இந்த நேரத்தில் இங்கே வந்தான்? போனத் தடவை நள்ளிரவில் அவள் வந்தப் போதும் ஆறுமுகத்தை மிரட்ட சரியான நேரத்தில் வந்தான். இப்போதும் வந்திருக்கிறான்! சென்ற முறை நடந்தது தற்செயல் என்று சொல்லலாம்! ஆனால் இரண்டு தடவை அப்படி
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 27 - ஸ்ரீலேகா D
“நைட் டைம்ல அப்படி அவன் இந்த பக்கம் சுத்துறது ஸபூக்கியா இருக்க மாதிரி இருக்கு. அதனால தான் இந்த பக்கம் வராதேன்னு திட்டினேன். லைட்டு வெளிச்சம் இருக்க பக்கம் வாக்கிங் போக வேண்டியது தானே!” என அபர்ணாவிற்கு பதில் அளித்தாள்.
“நீங்க சொல்றது சரி! ஆனால், அவன் எதுக்கு இந்தப் பக்கம்
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 28 - ஸ்ரீலேகா D
“ஒரு விஷயம் கேள்விப் பட்டேன் மாதவி! எப்போவும் அடுத்தவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில மூக்கை நுழைக்குறது எனக்குப் பிடிக்காது. இதை எப்படி கேட்குறதுன்னு புரியலை! இது உங்க பர்சனல் விஷயம், எனக்குப் புரியுது!”
பூர்வி தயக்கம் மிக்க பேசவும் மாதவி தலையில் கை வைத்துக் கொண்டாள்.
“நினைச்சேன்,
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 29 - ஸ்ரீலேகா D
எனினும் அனில் பற்றி மாதவி சொன்னதை முழுவதும் உண்மை என்று அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எதனாலோ அனில் மீது அவளுக்கு நல்ல அபிப்ராயம் ஏற்படவே மாட்டேன் என்றது! அனில் எதையோ மறைக்கிறான், பொய் சொல்கிறான் என்று அவளுக்கு தோன்றியது. ஆனால் அவளை தவிர வேறு ஒருவரும் அவன் மீது குற்றம்
... -
தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 30 - ஸ்ரீலேகா D
மொத்தத்தில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுப் போல உணர்ந்தாள் பூர்வி. துணை என்று ஒருவரும் இல்லாமல் இரண்டு சிறுக் குழந்தைகளுடன் எப்படி இந்த தீயவனை வெல்லப் போகிறாள்? அவளுக்கு ஏதாவது நேர்ந்தால் பிள்ளைகளின் கதி என்ன ஆகும்?? யோசித்து, யோசித்து, குழம்பி, குழம்பி பூர்வி ஒரு முடிவை எடுத்தாள். இந்த
...
Page 2 of 3