(Reading time: 9 - 17 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

எனக்குத்தான் தெரியும். போலீசுக்குப் போனா, நானுதான் கொயந்தய கொன்னுட்டு அத மறைக்கிறதுக்குப் போனது மாதிரி பிளேட்ட மாத்துனானுங்க.”

   

ருக்குமணியின் பையன், பழைய நினைப்பாலோ என்னவோ பக்கத்தில் இருந்த ஒரு ஒயின் ஷாப்பையே ஏக்கத்தோடு பார்த்தபோது, இளங்கோ பரவசமானான். என்ன செய்கிறோம் என்பது புரியாமலேயே, அவள் கரங்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டு, அவளை தாறுமாறாக இழுத்தான். உடனே அவள் கூச்சலிட்ட போது, அந்தக் கரங்களை விட்டு, குழந்தை மாதிரி கெஞ்சினான்.

   

"ஒருத்திய நிசமாவே கொலைத் தண்டனையிலிருந்து காப்பாத்திட்டேம்மா. ஒன் பையன கொன்னதா, சரோசா என்கிறவளை போலீஸ் பிடிச்சு வைச்சிருக்குது. இப்போ நீயும், நானுமா டெப்டி கமிஷனரைப் பார்த்து நிசத்த சொல்லணும்.”

   

"இந்த போலீஸ் கதயே வேணாம். கோர்ட்ல வேணுமுன்னா சாட்சிக்கு வாரேன்."

   

“அப்படிச் சொல்லப்படாதும்மா. உயிரோட இருக்கிற ஒன் கொழுந்தய கொன்னதா சொல்லி, சரோசாவுக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தால் அந்தப் பழி ஒனக்கில்லயா? ஒருத்தி செய்யாத தப்புக்கு அவஸ்த படணுமா? இந்த அநியாயத்த நாம ரெண்டு பேரும் டெப்டி கமிஷனருக்கிட்ட சொல்ல வேண்டாமா?"

   

"டெபதின்னா அது யாரு?"

   

“பெரிய போலீஸ் அதிகாரி.”

   

"போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை விடவா?”

   

"Cuba Cuba..."

   

“இன்ஸ்பெக்டரை விடவா?”

   

"இன்ஸ்பெக்டருக்கும் மேலே ஏ.சி. அதுக்கு மேலே.டி.சி."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.