கதவை தட்டிய பின்னரே.. கதவை திறந்து வினிதா உள்ளே வந்ததும் மறுபடியும் லாக் பண்ணிவிட்டாள்..
பாரதி என்ன பண்ற.. எதுக்கு லாக்.. ஏய் என்னாச்சிடி.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு அழுதியா.. என அவள் தோள் பற்றி கேட்க..அவள் பேசமால் இருக்கவே ..என்னடி டிரஸ் சால்டர்கிட்ட கிழிந்திருக்கு..என்ன ஆச்சிடி .. எனக்கு பயமாக இருக்கு பேசுடி என அவள் தோழியை பற்றி கண்ணீர் விட பாரதி அவள் தோள் சாய்ந்து அழுதே விட்டாள்..
பாரதியை சமாதானம் செய்து அவளது மடியில் சாய வைத்து தலையை கோதிவிட்டாள்.. பாரதியின் கண்ணீர் வடிந்துக் கொண்டே இருந்தது.. பாரதி அழாதடி.. எனக்கு கஷ்டமாக இருக்கு.. என்ன நடந்ததுன்னு சொன்னால் தானே புரியும்.. என வினி கேட்க .. என் நிம்மதியை பறித்து கொஞ்சம் கொஞ்சமாய் டாச்சர் பண்றது எப்போதும் அவன் மட்டும் தான்.. என மொட்டையாய் பாரதி கூற வினி புரியாது விழித்தாள்..
புரியலையா... உன் அருமை அண்ணா விஷ்வா தான்.. கொஞ்சம் மிஸ் ஆகிருந்தால் என்னை சீரழித்து மார்னிங் நியூஸ் பேப்பருக்கு ஹெட்லைனாக மாத்திருப்பான்.. என தன் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு கூற வினியால் இந்த அதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை... விஷ்வா இப்படி செய்தானா..? என நம்பவும் முடியவில்லை.. பாரதியின் நிலை எண்ணி ஆத்திரமும் வந்தது..
என்னடி சொல்ற ..என வினி அதிர்ச்சியோடு கேட்க அவனே தான்.. என தங்களுக்குள் ஏற்பட்ட முதல் தகராறு முதல் இன்று நடந்த நிகழ்வு வரை அத்தனையையும் கூறினாள் பாரதி...
என்னடி .. இவ்வளவு எல்லாம் நடந்திருக்கு .. என்னிடமாவது சொல்லிருக்கலாம் இல்ல... நான் அம்மாவிடமாவது சொல்லி ஆரம்பத்துலேயே கண்டிச்சிருக்கலாம்.. இன்னைக்கு இருக்கு அந்த பொறுக்கி ராஸ்கலுக்கு..என வினி கோபப்பட.. வேண்டாம் டி.. என்னால நம்ம குடும்பத்தில் குழப்பம் வரும் ..அதற்காகத் தான் நான் பொறுமையாய் போனதே..என பாரதி கூற..
நீ என்ன லூஸாடி .. இவ்வளவு நடந்திருக்கு அவனை அப்படியே விடச்சொல்கிறாயா..?என வினி கோபப்பட நீ பேசு ..அவனிடம் .. அவன் மாறுவான்.. நீ பேசு கண்டிப்பாக..இது நமக்குள்ளயே இருக்கட்டும்...வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என பாரதி கூற உன்னைப் போய் காயப்படுத்த அவனால் எப்படி முடிந்தது என எண்ணிக் கவலைக்கொண்டாள் வினி..
வினி இன்னைக்கு என்கூட ஸ்டே பண்கிறாயா.... அம்மாவை என்னால பேஸ் பண்ண