(Reading time: 18 - 36 minutes)

ட் அப் வசந்த்!” ர.ரா. சமாளித்துக்கொண்டு பழைய விரைப்பிற்கு வந்தான், “பை த வே, நான் ஒரு டார்கெட் பிக்ஸ் பண்ணிருக்கேன், இனிமே ஏனோதானோ ‘ரன்’ கிடையாது, (’ராஜேந்திரன்கிட்ட வசவு வாங்கினதே போதும்’) லிசன் வசந்த், சரியா மூவாயிரம் வருஷம் பின்னால போறோம், குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட இடத்துல ஒருத்தரைப் பிடிக்குறோம்… அவரை மட்டும் பிடிச்சோம் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுப்போம்… அநேகமா நம்ம ஆராய்ச்சியைவிட அது அதிகமா பேசப்படும்…” ர.ரா அதிகமாக புதிர் போட்டான், இது அவன் இயல்பு இல்லை.

”பீடிகைலாம் ரொம்ப பலமா இருக்கு… பார்ட்டி யார் பாஸ்?”

“மூவாயிரம் ஆண்டு, துல்லியமா போறா மாதிரி ஸ்டாடிஸ்ஸை ரெடி பண்ணிட்டு வாங்க, அப்ப சொல்றேன்…”

”பாஸ், உண்மையாத்தான் சொல்றீங்களா?” வசந்த் எதற்கும் அவ்வளவு எளிதாக ஆச்சரியப்படும் ஆள் கிடையாது.

“விளையாட்டில்லை வசந்த்! அறிவியலைவிட இந்த உலகத்துல சக்திவாய்ந்த ஒன்னு இருக்குனா அது மதம்தான். எத்தனையோ மதம், எத்தனையோ கடவுள். எல்லாமே ஒருவித திரைக்குப் பின்னால இருக்கு, ஆனா, ஒரு மதம் மட்டும் எல்லாத்தையும்விட அதிகமா நம்பகத்தன்மை பெற்றிருக்கு…”

“கண்டதேவர் வழி” வசந்த் மெதுவாய், அழுத்தமாய் உச்சரித்தான். நி.நா. நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டாள்.

“அவர் உண்மையாவே கடவுளைப் பார்த்தார்னு நீங்களும் நம்புறீங்களா?” இருவரையுமே கேட்டாள்,

“நம்புறேன் நம்பல, அதைத்தான் முடிவு பண்ணிக்க விரும்புறேன் நான்” ர.ரா தன் உள்ளங்கைகளை மெல்ல தேய்த்துக்கொண்டபடியே பேசினான் “மத்தவங்களுக்கும் இவருக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கு நீனா- (’நி.நா!’) சாரி! கடவுளைப் பார்த்ததா சொல்ற யாருக்குமே அதுக்கான ஆதாரம் இல்ல, நம்பிக்கை அடிப்படைலதான் ஏத்துக்கப்பட்டாங்க, ஆனா கண்டதேவர் கதை அப்படியில்ல…”

“ஆமா நினூ, அவர் கடவுளைப் பார்த்ததை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்திருக்காங்க… ரெண்டு மூனு வெளிநாட்டு பயணிகள் கூட பார்த்திருக்காங்க… ஒரு பெரிய கூட்டத்துக்கு மத்தில இருந்தவர் அப்படியே ஒளிப்பிழம்பா மாறி காணாம போயிட்டாரு, ஒரு மணி நேரம் கழிச்சு அதே போல ஒளிப்பிழம்புல தோன்றித் திரும்பி வந்திருக்காரு… கடவுள் தன்கிட்ட பேசி, ஐந்து கட்டளைகள் கொடுத்ததா சொல்லிருக்காரு… அவர் திரும்பி வரப்ப ஒளிப்பிழம்புக்கு அந்தப் பக்கம் இருந்த கடவுளை அங்கிருந்த சிலரும் பார்த்திருக்காங்க… வெள்ளவெளேர்னு…” வசந்த் கொஞ்சம் உற்சாகம் தொற்றிக் கொண்டவனாய்க் காணப்பட்டான்,

நி.நா. மெதுவாக ‘ம்ம்…’ என்றாள், வசந்த் இலேசாய் சீற்றமடைந்தான், “நீ நம்பலேன்னா என்ன! ஆயிரக்கணக்கா டாக்குமெண்டட் எவிடன்ஸ் இருக்கு… ஒரு நாட்டுல இல்ல நாலு நாட்டுல, கண்டதேவர் ஒளியா மறைஞ்சு போயி திரும்பி வந்தது, ஒளிக்குள்ள மக்கள் பார்த்த கடவுளின் உருவம் எல்லாம் எல்லா ரெக்கார்டுலையும் ஒத்துப் போகுது… கல்வெட்டு, குகை ஓவியம், செப்பேடு எல்லாம் ஒத்துப் போகுது… ஐ.நா-வே வரலாற்றின் மிக நம்பகமான கடவுள் சந்திப்பு-னு சர்டிபிகேட் கொடுத்திருக்கு, சும்மா ஒன்னும் யாரும் மூவாயிரம் வருஷமா ஒரு விஷயத்தை நம்ப மாட்டாங்க நினு…”

”கூல் டவுன் வசந்த்… ஐ தாட் யு ஆர் அன் ஏதிஸ்ட்!” ர.ரா வசந்தின் தோள்களில் கைவைத்து அமர்த்தினான்,

“ஐ ஆல்வேஸ் ஆம் பாஸ்! பட் திஸ் இஸ்… இதுவும் அறிவியல்தான் பாஸ்!”

“ரிலாக்ஸ், நம்ம ஸ்டாடிஸ் தயார், நாளைக்கு நாம உண்மைய சந்திக்கப் போறோம்…”

”நிச்சயமா பாஸ்?” வசந்திடம் இருந்தது ஆர்வமா ஆச்சரியமா என்று சொல்ல இயலவில்லை.

”சிமுலேஷன் ரன்லாம் கச்சிதமா போயிருக்கு வசந்த், நாம நூறு சதவீதம் தயார்!” நி.நா-வும் உற்சாகமாகவே காணப்பட்டாள்,

“ஸோ, நாளைக்கு நாம கடவுளைச் சந்திச்சவனைச் சந்திக்கப் போறோம்…” ர.ரா மந்திரவாதி போல கையை ஆட்டிக் காட்டினான்.

”ஓ.கே! தொடங்கலாமா?” ர.ரா துல்லியமான வெள்ளை ஆடைகள் அணிந்திருந்தான், ஆய்வக அங்கியோடு சேர்த்து, அவனைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வாழ்நாள் நிகழ்வுதான்.

“யெஸ் பாஸ்…” “ரெடி பாஸ்!” வசந்த் ஆரஞ்சு வண்ணமும், நி.நா. வெளிர்நீலமும் அணிந்திருந்தனர். வசந்த் ஆய்வக அங்கி இல்லாமல்தான் இருந்தான்.

“ஃபீல்ட் ஸ்டெபிளைசர்ஸ்…”

“செக்!”

“ஆசிலேட்டர்ஸ்…”

“செக்!”

“ஸ்கோப்ஸ்…”

“செக்!” – ர.ரா சொல்லச் சொல்ல வசந்தும் நி.நா-வும் ஒவ்வொரு கருவியாக இயக்கிக் கொண்டே வந்தனர், மெல்ல அந்த ஆய்வுக்கூடம் உயிர்பெற்றது, மூவரின் இதயத்துடிப்போடு சேர்த்துக் கருவிகளும் விரைவாகத் துடித்தன… ர.ரா தனது இறுதி கட்டளையைக் கொடுத்தான் “எங்கேஜ்!”

’சொய்ய்ய்ய்ங்ங்ங்ங்…’ என்று ஒரு மெல்லிய அழுத்தமான கீறல் ஒலி காதை அடைக்க, ஸ்டாடிஸ் கூண்டைச் சுற்றி ஒளிக்கோலம் தொடங்கியது… பலவண்ணங்களில் தொடங்கி முடிவாக இளஞ்சிவப்பு, வெளிர்நீல இழைகளில் ஊசலாடியது…

உள்ளே ஒருவன்!

மூவரும் சில நொடிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ர.ரா-தான் முதலில் பேசினான் (மூவாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழிவழக்கில். இதற்காகவே அதை கற்றிருந்தனர். இன்னும் உச்சரிப்பு அத்தனை சுத்தமாக வரவில்லைதான்!)

“வந்தனம்… கடவுளைக் கண்டீரா?”

பரபரப்பில் நேரடியாக இந்தக் கேள்வியையே முதலில் கேட்டான், உள்ளே இருந்தவன் திருதிருவென்று விழித்தான், ஏதோ சொல்ல முனைந்து ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ’இல்லை’ என்று அசைத்தான்,

“ஐயா, கண்டதேவர்தானே தாங்கள்?” ர.ரா உறுதி செய்துகொள்ள விரும்பினான், வசந்த் அவன் தோளை நிமிண்டினான் “என்னடா?”

“பாஸ், கண்டதேவர்-ங்குற பேர் பிற்காலத்துலதான் வந்துச்சு, அவர் இயற்பெயர் சின்னாளன்!”

“ஆமாமா, அவசரத்துல மறந்துட்டேன்… ஐயா சின்னாளர்தானே தாங்கள்?”

ஆமாம் என்று தலையசைத்தான், இன்னும் அவனுக்குப் பேசும் துணிவு வரவில்லை போல, மருண்ட கண்களால் கூண்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான், ர.ரா தொடர்ந்தான்,

“கடவுளைத் தாங்கள் நேரில் கண்டீர்களா?” மௌனம், “இறைவன்? பகவான்? ஆண்டவன்? என்னையா இந்தாளு?”

“பாஸ், அவர் கொஞ்சம் பயந்திருக்காருனு நினைக்கிறேன்…”

“ஐந்து கட்டளைகள்…” நி.நா ஆசிரியரின் கேள்விக்குப் பதில் சொல்லும் மாணவியைப் போல உற்சாகமாய் கையை உயர்த்திச் சொன்னாள் “அதப் பத்தி கேளுங்க…”

வசந்த் கேட்டான், மெல்ல ஒவ்வொரு கட்டளையாக சொல்லிக் காட்டினான், உள்ளே இருந்தவன் ’திருதிரு’தான்… “ஹோப்லெஸ் பாஸ்!”

”எங்கயோ தப்பு நடந்திருக்கு வசந்த்!” ர.ரா நி.நா-வை சற்றே வெறுப்புடன் பார்த்தான்,

“வாய்ப்பே இல்ல! எல்லாமே சரியா இருக்கு…” நி.நா விரைப்பாக பதிலிறுத்தாள்.

“பாஸ், ஒரு வேள, அங்க கூட்டம் அதிகமா இருந்ததால ஆள் மாறிடுச்சோ? பாஆஆஸ்ஸ்ஸ்…” வசந்த் கூண்டைக் காட்டி அலற, ர.ரா-வும் நி.நா-வும் அவசரமாய் திரும்பி பார்த்தனர், உள்ளிருந்தவன் மண்டியிட்டுத் தலையால் தரையைத் தொட்டுத் தொட்டு வணங்கிக் கொண்டிருந்தான், அவன் உடல் இலேசாய் நடுங்கியது, “ரொம்ப பயந்துட்டான் பாஸ், திரும்ப அனுப்பிடலாம்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.