(Reading time: 14 - 27 minutes)

வலாய் அவளிடம் பதில் எதிர்பார்த்து அவள் மீது படிந்தது அவன் பார்வை. அவன் கேட்ட விதமே அவள் சாதகமான பதிலையே தர வேண்டுமென்பது போல எதிர்பார்ப்பை அணிந்திருந்தது.

பதிலே வராதிருக்க மறுபடியும் என்னை உனக்கு பிடிச்சிருக்கா?” எனக் கேட்டவனின் கேள்விக்கு பதிலளிக்காதவளாய் அவனை தான் முதன் முறையாக பார்த்த போது அவனைக் குறித்து எண்ணியவற்றை அவள் பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தாள். காவலனாகிய அவனை கார்த்திருடனாக எண்ணியது குறித்து கூறியவள்.........

அப்போ உங்க மீசையைப் பார்த்து ரொம்ப பயமா இருந்துச்சு………………என்றவளாக நிறுத்தினாள்.

சாவகாசமாய் தன் மீசையை வருடியவன் அவள் கூறியது எண்ணிச் சிரிக்க , அவனோடு அவன் மீசையும் சிரிக்கின்றதோ என்பது போல அவளுக்கு தோன்றியது.

இருவருக்குமிடையே சூழ்ந்த மௌனத்தை சட்டென்று கலைத்தவன்.

“இப்பவும் என் மீசையைப் பார்த்து பயமாயிருக்கா?” எனக் கேட்டான்.

நாணமாய் இல்லை என்று தலையசைத்தவளின் பதிலில் அவன் எதிர்பார்த்த சம்மதம் கள்வனாய் ஒளிந்திருக்க , அதைக் காவலனாய் கண்டுக் கொண்டவன் அவளது கரத்தினில் தன் கரத்தைக் கோர்த்தான்.

அவனுடைய கரத்தின் வெம்மையை உணர்ந்தவளின் மனக் கண்முன்னே அன்பும், சாகசமுமான எதிர்கால வாழ்க்கை விரிய தன்னைக் காதலோடுப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்களுக்குள் தன் கண்ணைக் கலந்தாள் அவள்.

This is entry #44 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை -காதல் வாழ்க்கை

எழுத்தாளர் - ஜான்சி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.