(Reading time: 73 - 145 minutes)

ரு காதலனுக்கு, தான் தன் காதலியால் காதலிக்க படுகிறோம் என்பதை விட மிக பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்.

அதை ஏற்படுத்தி கொடுத்த மஹிமாவை நன்றியோடு நோக்கினான்.

அவளும் அதை ஆமோதிப்பதாய் விழியசைத்தாள். 

திரும்பி சகியை பார்த்தவனின் விழிகள் அப்படியே நின்றது.

சகி....

கவுதம் மன்னிச்சுடுடா... என்னோட உணர்வுகள்ளயே இருந்த நான் உன்னோட காதலை புரிஞ்சிக்காம போய்டேன்டா. அவன் விழிகள் கலங்கியிருந்தது.

சகி... இன்னொரு முறை இந்த மாதிரி பேசுன உன்ன கொன்னுடுவேன். எனக்கு தெரியும் டா... நீ உன்னோட உணர்வுகளோட எந்த அளவுக்கு போராடிட்டு இருந்தனு... நிச்சயமா நீ வேணும்னே அப்படி இருக்க கூடிய ஆள் இல்லை. அதனால நீ யாருக்கும் உன்னை பத்தி... நம்மளோட நட்பை பத்தி ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் இல்லைடா...

அவன் பார்வை சற்று நேரத்திற்கு முன் நன்றியோடு பார்த்த மஹிமாவை இப்போது சுட்டு கொண்டிருந்தது.

பதிலுக்கு அவளும் முறைத்தாள்.

என்ன சார்..? உண்மைய சொன்னா உங்களுக்கு கோபம் வருதா?

என்ன உண்மைய நீ சொன்ன மஹிமா?

இதோ உங்க ஃப்ரண்ட் ... என் ஃப்ரண்டோட காதலை புரிஞ்சிக்கலைன்ற உண்மைய சொன்னேன். 

அடிப்பட்ட பார்வை சகியிடம் அவன் கையை ஆதரவாய் அழுத்தியவன்.

உனக்கு தெரியுமாக்கும் இவன் அவ காதலை உணரவில்லைனு.

ஹ்ம்.. உணர்ந்திருந்தா என் ஃப்ரண்ட இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுருப்பாரா?

அவள் குரல் கரகரத்தது.

என்ன.... நீ என்ன சொல்லுற மஹிமா ? ரிஷிகா ... இப்போ எங்க இருக்கா? அவ ... அவளுக்கு ஒன்னுமில்லையே?

மஹிமாவின் கை பற்றி குலுக்கினான் சாஹித்யன்.

கைய எடுங்க சார்... இப்போ வந்து கேளுங்க...என்ன ஆச்சுனு?

அத்தனை நேரம் மிடுக்காய் பேசியவள் இப்போது அழுகிறாள் குழந்தையாய்.

அய்யோ... மஹிமா, உனக்கு என்னை திட்டனும்னா ஒரு நாள் முழுக்க வேணும்னாலும் திட்டு நா கேட்டுக்றேன். ஆனால், ரிஷிகா இப்போ எங்கனு சொல்லு...? 

அவன் விழிகளும்... அவன் குரலும் மஹிமாவிற்கு உரைக்கவில்லை. அவள் செவிகளில் மருத்துவரின் கூற்றே விழ.. விழி நீர் சிந்தி கொண்ன்டிருந்தாள்.

வனிதா... நீயாச்சும் சொல்லு?

அவன் குரலில் அத்தனை பரபரப்பு.

விழி கசிந்து கொண்டே இடையோடு சொல்லி முடித்தாள் வனிதா.

சிலை போல் அப்படியே அமர்ந்தான் சாஹித்யன்.

அவன் பின்னோடு சென்று அவன் தோளை பற்றினான் கவுதம்.

கவுதம்... நான் தப்பு பண்ணிட்டேன்டா.. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். மஹிமா சொன்னது போல எனக்கு மனசே இல்லைடா... இருந்திருந்தா என்னோட காதலிய நான் இந்த அளவுக்கு கஷ்டபட விட்டுருப்பேனா சொல்லு...

என் உணர்வுகள மட்டுமே பார்த்து என் தரப்புல இருந்து மட்டுமே யோசிச்சு அவ படுற கஷ்டங்கள் என் கண்ணுக்கு தெரியாம போச்சேடா...இதோ இன்னக்கி கூட அவள பார்க்காம திரும்பிட்டேன். இத நினைச்சும் ரொம்பவே கஷ்ட பட்டுருப்பாளோ... என்னால தான் எல்லாமே என்னால தான்.... எனக்கு மன்னிப்பே கிடையாது கவுதம்...

எனக்கு அவள பாக்கனும்டா... இப்பவே... 

கண்ணீரோடு புலம்பியவனை தூக்கி நிறுத்தி வனிதாவிடம் மருத்துவமனையின் முகவரி கேட்டு காரில் அவர்களை அழைத்து சென்றான்.

வழியில் விடாமல் புலம்பி கொண்டிருந்தவனை புரியாமல் பார்த்தாள் மஹிமா...

என்னதிது?... தன் தோழியின் காதலை மதிக்காதவனை நான்கு கேள்வி கேட்க வேண்டும் என்ற உத்வேகத்தில் வந்தாள். ஆனால் இப்போது இங்கு என்னவென்றால்..சாஹித்யனின் செயல்பாடு தலையை சுற்றியது. ஆக இவனுக்கும் அவள் மேல் காதல் உள்ளது. அப்படியென்றால் எது அவர்களை தடுக்கிறது. 

அருகில் அமர்ந்து சகியையே பாவமாய் பார்த்து கொண்டு வந்த வனிதாவின் செயலும் அவளை குழப்பியது. ஆக எதோ இருக்கிறது. தனக்கு தான் தெரியாமல் போய் விட்டது. எது எப்படியோ தன் தோழியின் காதல் கை கூடினால் மகிழ்ச்சி.

விடாமல் புலம்பியவனை பாவமாய் பார்த்தாள் மஹிமா.

மருத்துவமனை வளாகத்திற்குள் கார் நிற்க.. நால்வரும் இறங்கி நடந்தனர்.

எதிர்பட்ட மஹேனிடம்,

மஹி.. ரிஷிகா...?

உதட்டை பிதுக்கினான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.