(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

"என் செல்லம்ல... கொஞ்சமா குடிடா செல்லம்... பசிக்கும்... கண்ணுல..."

  

பக்கத்தில் எங்கோ கேட்ட அந்த செல்லம் கொஞ்சும் இனியக் குரல் அவனை ஆச்சர்யப்பட வைத்தது...!

  

சத்தம் எழுப்பாமல் அமைதியாக நடந்து குரல் வந்த திசையில் சென்றான் அவன்... அங்கே, ஒரு தூணின் அருகே, அவனுக்கு முதுகை காட்டியப் படி முட்டிப் போட்டு அமர்ந்து, அங்கிருந்த நாய் குட்டிகளிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் ப்ரியா!

  

ஏதோ ஒன்று விக்கிராந்தின் மனதை காந்தமாக இழுக்க, அவளையே பார்த்தபடி நின்றான் அவன்... ப்ரியா நேர்த்தியாக அணிந்திருந்த பிரவுன் நிற சேலை காலை நேரக் காற்றினால் மெல்ல படபடத்துக் கொண்டிருந்தது! பின்னலிடப் பட்டிருந்த ப்ரியாவின் அடர்த்தியான நீண்ட கூந்தல், அவள் தரையில் அமர்ந்திருந்ததால், பக்கத்தில் இருந்த அவளின் கைப்பையின் மீது வந்து படர்ந்திருந்தது...!

  

திறமையான ஓவியர் துல்லியமாக அந்தக் காட்சியை வரைந்திருந்ததுப் போல கண்ணில் பட்ட காட்சி விக்கிராந்தின் மனதில் பதிந்துப் போனது!

  

பார்க்கிங்கில் வேறு ஒரு கார் கிளம்பும் ஓசை கேட்டு தன்னிலை பெற்ற விக்கிராந்த், மீண்டும் ஒருமுறை ப்ரியாவை பார்த்தான்... அவள் இன்னமும் அவனை கவனிக்காமல், நாய் குட்டிகளிடம் தான் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்... அவனையும் அறியாமல் அவனின் உதட்டில் மெல்லிய புன்னகை உதயமானது! சத்தம் எழுப்பாமல் மீண்டும் பைக் நின்ற இடத்திற்கு சென்றவன், பைக்கையும் முடிந்த அளவில் சத்தம் எழுப்பாமல் கிளப்பினான்... ஏனோ மனதினுள் தென்றல் வீசுவது போல் ஒரு சுகம் ஏற்பட்டிருந்தது...!

  

அபார்ட்மெண்ட்டை விட்டு வெளியே வந்து மெயின் ரோட்டிற்கு செல்ல இருந்த சாலையின் ட்ராஃபிக்கில் பைக்கை நிறுத்தியவனின் கண்ணில் எதிரில் இருந்த அந்த கடை பட்டது...!

  

சிறு குழந்தைகளுக்கான பொருட்களை விற்கும் பிரத்தியேக கடை அது... மின்னலென ஒரு எண்ணம் அவனுள் தோன்றவும், பைக்கை திருப்பி அந்த கடையின் அருகே நிறுத்தினான்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.