தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 12 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"என்னம்மா ப்ரியா இவ்வளவு கம்மியா சாப்பிடுற? இன்னும் கொஞ்சம் சாதம் எடுத்துக்கோ..." ராஜம் சொன்னதோடு நிறுத்தாமல், ஸ்பூனில் சாதம் எடுத்து ப்ரியாவின் தட்டின் பக்கம் கொண்டுப் போனாள்.
ப்ரியா அவளை தடுத்தாள்!
"இல்லை, போதும் ஆன்ட்டி...!"
"இதே தான் ராஜம்! நான் சொன்னா அவ கேட்குறதே இல்லை! எப்படி இருக்கா பாரு, ஒல்லிக்குச்சி மாதிரி... ஏதாவது சாப்பிட்டா தானே?" என்று குறைப்பட்டாள் வைஜெயந்தி.
"நீங்க கவலைப் படாதீங்க அக்கா! சீக்கிரமே அவ உடம்பை தேத்திடலாம்... இனிமேல் நான் சென்னை வரும் போதெல்லாம் அவளும் இங்கே தான் வந்து தங்க போறா..."
"ஆன்ட்டி..." என்று ப்ரியா ஏதோ சொல்ல தொடங்கவும், ராஜம் அவள் பேச இடம் கொடுக்காமல்,
"நீ சும்மா இரு ப்ரியா! நான் உன்னை எதுவுமே கேட்கலை... நான் சொல்றதை தான் நீ கேட்கனும்... உன் வைஜெயந்தி அத்தை மாதிரி எல்லாம் என்னை ஏமாத்த முடியாது..." என்றாள்.
"அம்மா போதும்மா... பாவம் அவங்க, பயப் பட போறாங்க..." என்றாள் வர்ஷா.
"சரியா சொன்ன வர்ஷா, நான் ஹெட் மாஸ்டரா இருந்தேன்னு பேரு, இது போல எல்லாம் பசங்க யாரையும் கூட மிரட்ட வாய்ப்பே அமைஞ்சது இல்லை..." என்றார் கணபதி!
"அதே தான் அப்பா அம்மாவுடைய கவலையும்... விக்கியையும் என்னையும் மிரட்ட முடியாது, தெரியாத்தனமா ப்ரியா அவங்க கிட்ட மாட்டிக்கிட்டாங்க...! நீங்க கவலைப் படாதீங்க ப்ரியா, உங்களை நான் காப்பாத்துறேன்..."