“நான் தான் சொல்றேனே அவர் சரியான குழப்பவாதிம்மா. அவர் மனசுல நீதான் இருக்க ஆனா அது அவருக்கு தெரியல. அவருக்கு அவரே குழம்பிக்கறாரு. இப்ப அவர் மனசுல நீயில்லைன்னா எதுக்காக உன்னை வீட்டுக்கு வர சொல்லனும் போட்டியில கலந்துக்க சொல்லனும் சொல்லு”
“அந்த பொண்ணுங்க கிட்டயிருந்து தப்பிக்க என்னை அவர் யூஸ் பண்ணிக்கறார்ன்னு தோணுது”
“சரி அவரை விடு நீ சொல்லு நீ அண்ணாவை லவ் பண்றியா” என அவன் கேட்க நந்தினிக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை
“நந்தினி உன்கிட்ட தான் கேட்கறேன் நீ அவரை லவ் பண்றியா இல்லையா சொல்லு”
“எனக்கு தெரியலைண்ணா ஒரே குழப்பமாயிருக்கு அவர்க்கும் எனக்கும் வானத்துக்கும் பூமிக்கும் இருக்கற இடைவெளி ஏணி போட்டா கூட எட்ட முடியாத உயரத்தில அவர் இருக்காரு என்னால எப்படி முடியும்”
“முடியும் உன்னால முடியும் நீ சொன்னியே ஏணின்னு அது இப்ப உன் கையில கிடைச்சிருக்கு அதுல ஏறி அண்ணாவை நீ ஈசியா அடையலாம்.”
“என்ன சொல்றீங்கண்ணா”
“கவனமா கேளு அண்ணாவும் நீயும் லவ் பண்றீங்க எனக்கு புரியுது ஆனா சொல்ல மாட்டேங்கறீங்க காரணம் அண்ணாவே சொல்லட்டும்னு நீ இருக்க இதுல பத்தாததுக்கு அந்தஸ்து பார்க்கற உன்னை விடு நீ சொல்லனும்னு அண்ணா எதிர்பார்க்கறாரு காரணம் நீ யாருமில்லாத பொண்ணு உன்கிட்ட தப்பா எப்படி பேசறதுன்னு பயந்து சாகறாரு எங்க தான் எதையாவது சொன்னா நீ எங்க அவரை விட்டுட்டு போயிடுவியோன்னு பயம் அதான் எதையும் சொல்லாம கிடந்து தவிக்கறாரு”
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.