(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பலவாறாக  யோசித்து யோசித்து தூக்கத்தையே அடியோடு மறந்தாள்.

   

நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது.

   

நேரம் வேகமாக ஓடியது. ரிஷி வெளியில் செல்லாமல் தன் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்தான். தன்னைப்பற்றி யோசித்து யோசித்து பதில் கிடைக்காமல் பைத்தியக்காரன் போல கிடந்தான். ரிஷியின் நிலையை பார்த்த தாத்தாவும் அர்ஜூனிடம் பேசி விவரம் அறிந்துக்கொண்டு அமைதியானார். ரிஷியை போலவே நந்தினியும் பயங்கரமாக யோசித்தாள் அவளுக்கு என்ன முடிவு எடுக்க வேண்டுமென்பதே புரியாமல் போனது. தன் நிலைமையும் ரிஷியின் நிலைமையையும் நினைத்து கம்பேர் பண்ணிக்கொண்டு பித்து பிடித்தவள் போல் ஆனாள். 

   

5வது நாள் விடியல் பலபேருக்கு பலவிதமான திருப்பங்களை தந்தது.

   

தாத்தா தன் வீட்டில் அழகாக ரெடியாகி சீக்கிரமாக வரப்போகும் பெண்களை வரவேற்க ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டார். வழக்கம்போல் ரிஷியும் வரப்போகும் பெண்களையும் தனக்காக வரும் நந்தினிக்காகவும் அழகாக டிப்டாப்பாக உடையணிந்து மாடல் போல் வந்து தாத்தா பக்கத்தில் அமர்ந்திருந்தான். அவனுடைய சித்தப்பா அனைத்து கம்பெனிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மொத்த குடும்பத்துடன் வீட்டில் தங்கிவிட்டார்.

   

ரிஷியின் அப்பா அம்மா பாட்டி 3 பேரும் தாங்கள் பார்த்து வைத்த பெண்களை அழைத்துவர காலையிலேயே சென்றுவிட்டனர். 

   

தாத்தாவும் ஹாலில் இருந்த சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தார் அது 9 என காட்டவும் வாசலை பார்த்தார். அங்கு ஒரு பெண் நடந்துவந்தாள் அவள் கூடவே அங்கு.....

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்.

Go to Thooral pola kathal theenda story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.