என சபித்துவிட்டு போனை வைத்து விட்டு திருப்தியடைந்தான் ரிஷி.
வெண்ணிலாவிடம் மாட்டிய அர்ஜூன் அரை மணி நேரமாக அவளின் கழுத்தறுப்பிற்கு பின்பு அவளிடம் கத்தினான்
”இங்க பாரு அண்ணாக்கு கல்யாணம்னா அவங்க வீட்ல போய் பேசு என்னை ஏன் கேள்வி கேட்கற”
“உனக்கு தெரியாமதான் எல்லாம் நடக்குதா”
“ஆமாம் இப்ப என்னாங்கற நாளைக்குதான் அந்த பொண்ணுங்க வராங்க நீயும் உன் அப்பனோட ரிஷிண்ணா வீட்டுக்கு போ பேசு என்னை விடு என்னை ஏன் தொல்லை பண்ற என்னால உனக்கு பதில் சொல்ல முடியலை”
“ஏன் என்னால பேச முடியாதுன்னு நினைக்கறியா”
“நான் நினைக்கலை ஆனா உன்னால அந்த வீட்ல நுழையமுடியுமான்னு மட்டும் யோசி”
“ஏன் எனக்கென்ன குறைச்சல்” என அவள் நீட்டி முழக்கி பேசவும் அவளை தலை முதல் கால் வரை இன்ச்இன்ச்சாக பார்த்தவனுக்கு மனம் தடுமாறியது இதற்கு காரணம் ரிஷி தந்த சாபத்தாலா அல்லது வேற காரணமா என தெரியாமல் குழம்பி அவளிடம்
”இப்படியே நீ போனா உன்னை வீட்டுக்குள்ள விடமாட்டாங்க இப்ப கிளம்பு எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு”
“இரு நான் மட்டும் ரிஷியை கல்யாணம் பண்ணிக்கலைன்னா”
”ஆ என்னை பண்ணிக்கிறியா நான் வெட்டியாதான் இருக்கேன்”
“சீ போ” என அவனிடம் எரிந்துவிழுந்துவிட்டு வெளியே சென்றாள் வெண்ணிலா