“சரி யோசி அதுவரைக்கும் அண்ணா கூப்பிட்டா வெளிய போயிடாத சரியா உன் போன் கொடு அதை நானே வைச்சிக்கிறேன் அவர் வந்தாலும் சரி போன் பண்ணாலும் சரி நீ எதையும் பேசாத எல்லாம் ஆற அமர பேசிக்கலாம்” என சொல்லியவன் அவளை ஹாஸ்டலில் விட்டுட்டு மறக்காமல் அவளது செல்போனை எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு சென்று வேலையில் மூழ்கினான்
மறுநாள் முழுவதும் ரிஷிக்கும் நந்தினிக்கும் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் குழம்பித்தவித்தார்கள். இன்னும் 1 நாள் கெடு கொடுக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் பார்க்காமல் தீவிரமாக யோசிக்கலானார்கள்.
ரிஷியோ அர்ஜூனுக்கு அன்று முழுவதும் 10 நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்தான்
”ஹலோ”
“அண்ணா என்னால முடியலை எதுக்கு இத்தனை முறை போன் பண்றீங்க”
“உன் தங்கச்சி ஏதாவது சொன்னாளாடா”
“அவள் சொல்றது இருக்கட்டும் உங்க முடிவு என்ன”
“நான்தான் நேத்தே சொல்லிட்டேனே எனக்கு அவள் வேணும்”
“வேணும்னா”
“கல்யாணம் செஞ்சிக்கிறேன்டா”
“சரி அப்புறம்”
“நம்பமாட்டியா”