(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 08 - சசிரேகா

   

போகும் வழியெல்லாம் நந்தினி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அர்ஜூனே அவளை பேசவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்

   

”இங்க பாரு நந்தினி அண்ணா ஒரு பணக்காரன் உன்னை மாதிரி ஆயிரம் பொண்ணுங்களை பார்த்தவரு. அவரை நம்பி ஏமாறாத. என்ன தைரியத்தில நீ அண்ணாவோட நேத்து மகாபலிபுரம் இன்னிக்கு ஓட்டல்ன்னு சுத்தற இது தப்பில்லையா

   

உன்னை பத்தி நீ கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா கல்யாணத்துக்கு முன்னாடி அண்ணாவோட தப்பா நடந்துக்கலாமா சொல்லு அவரும் என்னடான்னா லவ்வுன்னா இல்லைங்கறாரு ஆனா உன்னை வேணும்ங்கறாரு எதுக்கு அந்த வீட்டில் இருக்கறவங்க வாயை அடைக்கறதுக்காகவா இல்லை அந்த 3 பொண்ணுங்ககிட்டயிருந்து தன்னை காப்பாத்திக்கறதுக்காகவா நீயே சொல்லு இது தப்புதானே 

   

உண்மையா அவர் உன்னை லவ் பண்ணியிருந்தா இப்படி ஒட்டலுக்கு கூட்டிட்டு போவாரா சொல்லு. எனக்கு இது சரியாபடலை நீயும் வந்த நாள்ல இருந்து அவரை அத்தான் அத்தான்னு கூப்பிடறதும் அதுக்கு அவர் உன்னை ஒரு மார்க்கமாக பார்க்கறதும் சரியில்லை ஏதாவது தப்பு நடந்துட கூடாதுன்னுதானே நான் உன்னை பத்திரமா ஹாஸ்டல்ல தங்க வைச்சேன் 

   

ஆனாலும் என் கண்ல மண்ணைத்தூவிட்டு நீ அவர்கூட போற தப்பில்லையா நான் உன் நல்லதுக்குதானே பேசறேன் எல்லாம் பார்த்து பார்த்து செய்யறேன் நீ ஏன் அதை புரிஞ்சிக்கமாட்டேங்கறம்மா.

   

 இங்க பாரு அவங்க வீட்டை பத்தி உனக்கு தெரியாது நான் சொல்றேன் கவனமா கேளு அப்புறமா நீ ஒரு முடிவுக்கு வருவ. அவங்க குடும்ப பிசினஸ் என்ன தெரியுமா ஆட்டோமொபைல் அதாவது டூவீலர்கள் ரெடிபண்ணி விக்கறது ஏற்றுமதி பண்றது. வண்டிகளை ரெடிபண்றதுக்கான ஸ்பேர்பார்ட்ஸ்களை கூட வெளிநாடுகள்ல இருந்து தான் இறக்குமதி செய்வாங்க. 

   

ஆரம்பத்தில இந்த பிசினஸ் செஞ்சது ரிஷிஅண்ணாவோட தாத்தா செல்வகணபதி ஆரம்பத்தில அந்த காலத்துல முதல்ல சைக்கிளைதான் ரெடிபண்ணி விக்க ஆரம்பிச்சாரு. அதுல வந்த 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.