அவளை யாராவது பாராட்டலைன்னா தூக்கமே வராது. பிசினஸ் பத்தி எதுவும் தெரியாது ஆனா மத்தப்படி எல்லாத்தையும் கத்துவைச்சிருக்கா, சிறந்த மருமகள்னு பேர் எடுக்கனும்ங்கறது அவளோட ஒரே குறிக்கோள் அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வாளாம் அந்த பொண்ணு வீட்டுக்கு பக்கத்து வீட்டு அம்மாகிட்ட விசாரிச்சி அவளை பத்தி தெரிஞ்சிகிட்டேன். அதைப்பத்தி பவித்ராம்மாவுக்கு தெரியுமா தெரியாதான்னு எனக்கு தெரியாது ஆனா நீ இதைப்பத்தி தெரிஞ்சிக்கறது நல்லது உனக்கு பயன்படும் புரியுதா”
“ம்”
“அடுத்து 3வது பொண்ணு பேரு மிதுனா பாட்டியோட வரவழைப்பு அவங்க ஊரு பொண்ணு பாட்டியோட ஜெராக்ஸ்ன்னு சொல்லலாம். பாட்டி இருக்கறப்பவே அந்த வீடு தாங்காது இதுல பாட்டி மாதிரியே இன்னொருத்தி வந்தா என்னாகும்னு நீயே கற்பனைப் பண்ணிக்கம்மா”
“ம் புரியுதுண்ணா இந்த காரணங்களுக்காகதான் அத்தான் என்னை தேடிப்பிடிக்கறாரா”
“ஆமாம் அதனாலதான் எனக்கு பிடிக்கலை உன்னை அவர்கிட்டயிருந்து பிரிக்கப் பார்க்கறேன் முடியலை. சரி நீ சொல்லு உனக்கு ரிஷிஅண்ணாவை பிடிக்குமா நீ அவரை லவ் பண்றியா”
என அவன் கேட்கவும் நந்தினிக்கு வாயிலிருந்து வார்த்தை வரமாட்டேன் என்றது. அதைக்கவனித்தவன் அவளிடம்
”இங்கபாரும்மா நாளைக்கு ஒரு நாள் டைம் அதுக்கு அடுத்த நாள் நீ எனக்கு போன் பண்ணி சொல்லிடு எதுவாயிருந்தாலும் சரி அண்ணனை பிடிச்சிருக்குன்னாலும் சரி பிடிக்கலைன்னாலும் சரி சொல்லிடு. அப்பதான் என்னால பிரச்சனையை சமாளிக்க முடியும் அண்ணா உன் மேல எந்த நம்பிக்கையில உன்னை வீட்டுக்கு வரசொல்றாருன்னு எனக்கு புரியலை
ஆனா ஒரு விசயத்தை மறந்துடாத அவரை நம்பி நீ போனா நீதான் அந்த வீட்ல எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். பாட்டிகிட்ட மாட்டினேன்னு வை அடுத்த பவித்ராம்மாவா உன்னை மாத்திடுவாங்க புரியுதா நல்லா யோசி உன்னால சமாளிக்க