(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

நடப்பதை கவனிக்கலானான்.

   

வீட்டில் இருந்த ரிஷியின் சித்தியும் சித்தப்பாவும் கூட தங்களுக்குள் பேசிக்கொண்டனர்

   

”பொண்ணு ரொம்ப அழகாயிருக்கா” என்றார் சித்தப்பா கேசவமூர்த்தி

   

”ஜோடிபொருத்தம் நல்லாதான் இருக்கும்” என்றாள் சித்தி சுசித்ரா

   

”இதேமாதிரி நம்ம 2 பையன்களுக்கும் பொண்ணு பார்த்து நேரத்தோட கல்யாணத்தை முடிச்சிடனும் பாவம் அவங்களும் தனியாத்தானே இருக்காங்க”

   

“இருக்காங்க ஆனா என்ன பிரயோசனம் இன்னும் அவங்களுக்கு பொறுப்பு வரலையே மூத்தவன் என்னடான்னா வீட்ல தூங்கறதுக்கு மட்டும்தான் வர்றான் மீதி நேரம் எல்லாம் ஆபிசே கதின்னு சுத்தறான். சின்னவன் என்னடான்னா யார் எங்க பிரான்ச்சு திறந்தாலும் சரி அவங்களுக்கு போட்டியா இவன் ஒரு பிரான்ச்சு திறக்கறான். இவனால எவ்ளோ செலவுகள் வருது தெரியுமா சொன்னா கேட்கறதில்லை இந்த லட்சணத்தில இந்த 2 பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சி வர்ற பொண்ணுங்க கொடுக்கற சாபத்தை நாம கட்டிக்கனுமா”

   

“அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா சொல்லுங்க”

   

“நான் விட சொல்லலையே முதல்ல இந்த வீட்டுக்கு ஒரு மருமகள் வரட்டும் இந்த 1 மாசத்தில இந்த பொண்ணுங்க என்ன செய்றாங்க ஏது செய்றாங்கன்னு பார்க்கட்டும் அப்பத்தான் அவங்களுக்கும் வாழ்க்கையில ஒரு ஐடியா கிடைக்கும். கிடைச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறத விட தனக்கு புடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்க நினைப்பாங்க. இல்லைன்னா பணம் இருக்கு பிசினஸ் இருக்குன்னு யாரைவது பெரிய பிசினஸ்மேன்களோட பொண்ணை  கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா மாறிட போறாங்க” என அவர் பயமுறுத்தவும் சித்தியும் சிறிது கலவரமடைந்தார்.

   

மோகனசுந்தரமும் அந்த பெண்ணின் பக்கம் அமர்ந்துக்கொண்டு தன் தந்தையை கெத்தாக பார்த்து சிரித்தார்

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.