சொன்னவளை வேலைக்காரர்கள் உதவியோடு அவளை கெஸ்ட் ரூமில் அழைத்துச் சென்றுவிட்டனர்.
அவள் சென்றதும் அவளைப்பற்றி அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
தாத்தாவிடம் மோகனசுந்தரம்
”அப்பா எப்படி நான் கூட்டிட்டு வந்த பொண்ணு”
“உன்னை மாதிரியே இருக்கா சந்தேகமேயில்லை. ரிஷிகூட இவ்ளோ நேரம் அதைதான் சொன்னான்”
“ஓ அப்படின்னா என்னை மாதிரியிருக்கற பொண்ணோட வாழறதுது ரிஷிக்கு சுலபம்தான்” என சொல்ல ரிஷி அதிர்ச்சியில் வாயே பிளந்தான்.
அதைப்பார்த்த மோகனசுந்தரம்
”என்னடா அப்படி பார்க்கற ஓ பொண்ணோட அழகுல மயங்கிட்டியா”
“ஆமாம் மயங்கறாங்க ஏன்பா உங்ககூட இருக்கவே நான் கஷ்டப்படறேன் இதுல உங்களை மாதிரியே இன்னொருத்தியை அதுலயும் 24 மணி நேரம் என் கூடவே இருப்பாள்னா நான் என்ன ஆகறது” என கேட்க
”அட எல்லாம் பழகிடும் சும்மா வந்த நாளே குறை சொல்லாதடா”
“அப்பா” என கத்தினான் ரிஷி.
“பேசாம இருடா எதுவாயிருந்தாலும் உன் தாத்தாதான் முடிவு எடுக்கனும் புரியுதா”
“ம்”
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories