மாதிரியிருக்கு”
”உங்களுக்கு ஒண்ணும் இல்லை வாங்க” என அழைக்க அதற்குள் நர்ஸ் அவனின் உடலில் பொருத்திய அத்தனை ஒயர்களையும் அவிழ்த்துவிட்டு, அவனுக்கென்று தரப்பட்ட ஆஸ்பிட்டல் உடையை வாங்கிக் கொண்டு அவனது சொந்த உடையை தர அவனும் அதை அணிந்துக் கொண்டு ஹரிணியுடன் புறப்பட்டான்.
காரை ஹரிணி ஓட்ட தருணோ பேசிக் கொண்டே வந்தான்
”இன்னிக்கு தேதி இருபதாமே, கடவுளே எத்தனை நாளா நான் இப்படி ஆஸ்பிட்டல்ல இருக்கேன்னு எனக்கேத் தெரியலை, எனக்கு என்னாச்சின்னும் தெரியலை, இப்பகூட நான் நார்மலா இருக்கறதா டாக்டர் சொன்னாரு ஆனா, எனக்கேத் தெரியுது நான் நார்மல் இல்லைன்னு, எனக்கு என்னாச்சி ஹரிணி எதுக்காக நான் இத்தனை நாளா ஆஸ்பிட்டல்ல இருந்தேன், கடைசியா எனக்கு என்ன நடந்ததுன்னு கூட எனக்கு சரியா ஞாபகத்துக்கு வரலை, ஹரிணி ப்ளீஸ் ஏதாவது சொல்லு, எனக்கு தலையே வலிக்குது எனக்கு என்னாச்சி சொல்லு ஹரிணி சொல்லு” என காட்டுக்கத்தல் கத்த ஹரிணியோ அதற்கெல்லாம் மசியாமல் காரை ஓட்டிக் கொண்டு வீட்டை அடைந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் தருணின் நிலைமை இயல்புக்கு வந்தது
”அப்பாடா வீட்டுக்கு வந்த பின்னாடிதான் நிம்மதியா இருக்கு” என சொல்லிக் கொண்டே சோபாவில் அமர்ந்தான், எதிரே இளங்கோவின் போட்டோ இருக்கவே அதிர்ந்தான்
”ஹரிணி இந்த போட்டோ எப்படி இங்க”
”நான்தான் மாட்டி வைச்சேன்“
”ஏன் ஹரிணி“
”எல்லாமே மாறிப்போச்சி தருண், நானும் மாறிட்டேன் நீயும் மாறிக்க”