(Reading time: 18 - 35 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”என்கிட்ட சொல்லியிருக்கலாமே என்னை எதுக்காக ஏமாத்தினீங்க”

   

”இதுல ஏமாத்த எதுவும் இல்லை, நல்லா யோசிச்சிப் பாரு நீயோ இளங்கோவை நினைச்சி புதுசா வாழ்க்கையை அமைச்சிக்காம அவன் ஞாபகத்தோட வாழனும்னு முடிவு எடுத்த, வேற எந்த ஆசையும் உன்கிட்ட இல்லை

   

நான் உன்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டது உன்னோட அழகைப் பார்த்தோ உன்கிட்ட இருக்கற பணத்தை பார்த்தோ இல்லை உனக்கு ஒரு பாதுகாப்பு வேணும் கண்டவன்லாம் உன்னை தொடக்கூடாது உனக்கு வேலியா நான் இருக்கனும்னு ஆசைப்பட்டேன், உன் வாழ்க்கையில நான் ஒரு அங்கமா இருக்க நினைச்சேன், உன் காதலை மதிச்சேன், உனக்கு மரியாதை தந்தேன், நீயும் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை, நான் இளங்கோவை போல இருக்கேன்னு சொன்னேன், உனக்கு பாதுகாப்பா இருப்பேன்னு சொன்ன பின்னாடிதானே நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட

   

நான் ஒண்ணும் உனக்கு குழந்தை தரேன்னு எங்கயும் சொல்லலையே, நீயும் அதுக்கு ஆசைப்படலை, முதல்ல உனக்கு என்னை உன் புருசனா கூட நினைக்க பிடிக்கலை, உனக்கு நான் ஒரு கார்டியனா பாடிகார்டா வெல்விஷராதான் தெரிஞ்சேன் அதானே சொல்லு நான் சொன்னது சரிதானே” என கேட்க அவனின் பேச்சைக் கேட்டு அசந்தேவிட்டாள் ஹரிணி

   

”இப்போ உன்கிட்ட வந்து எனக்கு இது போல குறையிருக்குன்னு சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டா நீ என்ன செய்திருப்ப, உனக்கு பாதுகாப்பு தேவை அதை மனசுல வைச்சி சரின்னு சொல்லியிருப்ப, அந்த நேரத்தில நான் என்ன சொல்லியிருந்தாலும் நீ சரின்னு சொல்ற மனப்போக்குலதானே இருந்த, அதனால நான் என் குறையை சொல்லலை”

   

”அப்புறம் எதுக்காக ஹனிமூன் ப்ளான் பண்ணீங்க”

   

”அதுவா என்னை கல்யாணம் செய்துக்கிட்டும் நீ கில்டியா பீல் பண்ண, இளங்கோவை மறக்க முடியாம கஷ்டப்பட்ட, அதனால உன் மனசை மாத்தலாம்னு ஹனிமூன் ஏற்பாடு செய்தேன், அதான் நடக்கலையே அப்பகூட உன்கூட உறவாட நான் ஆசைப்படலை, உன்னோட விருப்பத்துக்கு நான் மதிப்பு தந்தேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.