தூங்குவதற்காக அனுப்பியும் விட்டான். ரிஷி தந்த முத்தத்தால் கவரப்பட்ட நந்தினியும் அந்த சந்தோஷத்துடன் இனி எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் சரி நான் கண்டிப்பா ஜெயிச்சி காட்டுவேன் என தைரியமாக முடிவு எடுத்து சந்தோஷமாக உறங்க ஆரம்பித்தாள்.
ரிஷியும் நந்தினியின் கவலையை போக்க எண்ணி அவளுக்கு முத்தம் தந்து அவளை உற்சாகப்படுத்தினானே தவிர உள்ளுக்குள் அவனும் நடப்பதை பார்த்து பயந்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு இப்போது சோனா பற்றி கவலையில்லை. வந்தனா மற்றும் மிருதுளாவை பற்றிய கவலை அதிகமானது. நந்தினிக்கு சரியான போட்டியாளர்கள் அவர்கள்தான். எப்படியாவது நந்தினி இவர்களிடம் தோற்காமல் ஜெயிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டு எதையோ யோசித்துக்கொண்டே உறங்கலானான். முதல் நாள் போட்டி முடிந்தது.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.