இருவரும் அமர்ந்துக்கொண்டார்கள்.
”நந்தினி”
“அத்தான்”
“இன்னிக்கு நீ செஞ்ச சமையல் ரொம்ப நல்லாயிருந்திச்சி”
“நான் ஒண்ணும் பிரமாண்டமா செய்யலையே அத்தான் எல்லார் வீட்லயும் செய்றதைதானே செஞ்சேன்”
“ஆமாம் இருந்தாலும் என்னவோ நீ செஞ்ச சமையல்ல செயற்கை தன்மை இல்லை வந்தனாவை பார்த்தியா எல்லாரும் அவளை மெச்சிக்கனும்னு எப்படி சமைச்சி போடறா பாரு. இவளை நான் கல்யாணம் பண்ணா 1 மாசத்தில நான் ஓட்டாண்டியாயிடுவேன்”
“அப்ப சோனாவை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அத்தான்”
“அவள் சமைக்கற டிஷ் பேர்கூட எனக்கு புரியாத மாதிரியிருக்கு அந்த டிஷ்ஷூம் வித்தியாசமா இருக்கு”
“ஆனா நல்லாதானே இருந்திச்சி அத்தான்”
“நல்லாயிருக்கறதுக்கும் பிடிச்சிருக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு இப்ப வந்தனாவும் நீயும் செய்த டிஷ்கள் சாப்பிட பிடிச்சிருந்தது. ஆனா சோனாவும் மிருதுளாவும் செய்த டிஷ்கள் சாப்பிட ஒரு மார்க்கமா கஷ்டமா இருந்திச்சி”
“அதான் நான் ரசம் வெச்சேனே அத்தான் அது ஜீரணமாக்கிடும்”
”சரி விடு நீ சொல்லு ஒருவழியா நான்தான் வேணும்னு என் வீட்டுக்குள்ள வந்துட்ட”
“நானாவது உங்களை தேடி வந்துட்டேன் ஆனா நீங்க இப்ப வரைக்கும் ஒரு முடிவு