இருந்தான்.
வெங்கடேசனோ கிச்சனுக்குள் வர ஆனந்தியோ அவரிடம் இருந்து பால் பாக்கெட் வாங்கிக் கொண்டாள்
”ஆனந்தி”
”ம்” என சொல்லிக் கொண்டே ஆனந்தி காபி போடலானாள்
”உன் தம்பி அதான் ஆனந்த் அவன் என்னவானான்”
”தெரியலையே 2 வருஷம் ஆச்சி என்ன ஆனானோ ஏது ஆனானோ தெரியலை”
”விசாரிக்கறதில்லையா“
”விசாரிச்சிட்டேன் ஏதோ லவ் பெயிலராம் அதனால”
”அதனால”
”சூசைட் பண்ணிக்கிட்டதா கேள்விப்பட்டேன்“
”நீ அதை நம்பறியா”
”நம்பலை அதுக்காக நம்பாலும் இருக்க முடியலை”
”ஏன் அப்படி சொல்ற”
”அவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், ரொம்ப இளகின மனசுக்காரன், சின்ன வருத்தத்தை கூட அவனால தாங்கிக்க முடியாது, ம்ம் பாவம் லவ் பெயில் ஆனதால நிறைய பேர் தற்கொலை செய்துக்கறதை கேள்விப்பட்டிருக்கேன் ஆனா, ஆனந்த் கூட தற்கொலை செய்துக்குவான்னு நான் நினைச்சே பார்க்கலை”