(Reading time: 24 - 48 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”சூசைட் பண்ற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் நடக்கலை, யார் சொன்னா எனக்கு லவ் பெயிலியர்ன்னு, தள்ளி நில்லு நான் உள்ள போகனும்” என எரிந்து விழ ஆனந்தியும் உடனே நகர்ந்து நின்றாள். அவளைக் கடந்து ஆனந்த் உள்ளே செல்ல எதிர்பட்ட வெங்கடேசனோ

   

”வாங்க மச்சான் எப்படி இருக்கீங்க, ஆளையே பார்க்க முடியலையே”

   

”வெங்கி மாமா என்ன கிண்டலா, உங்க கல்யாணம் எப்படி நடந்தது, யாரால நடந்ததுன்னு மறந்துடாதீங்க”

   

”எதுவும் மறக்கலை உன்னாலதான் எங்க காதல் கல்யாணம் நடந்தது போதுமா”

   

”ம்ம் போதும்“

   

 என சொல்லிக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஒரு முறை சிகரெட் பிடித்து இழுத்தவன் அடுத்த முறை காபியை பருகினான்

   

”டேய் என்னடா இது சனிக்கிழமை அதுவுமா இப்படி சிகரெட்டோட உட்கார்ந்திருக்க தப்பு அதை தூக்கி எறி” என அக்கா கத்த அதற்கு தம்பி

   

”சனிக்கிழமைன்னா சிகரெட் பிடிக்க கூடாதுன்னு எந்த சட்டமும் சொல்லலையே அக்கா”

   

”விளக்கு வைச்ச நேரம் இப்படியா இருக்கறது அதை போய் தூரப்போட்டுட்டு வா”

   

”இல்லைன்னா என்ன செய்வ”

   

”ம்ம் உன் தலையில ஒரு குடம் தண்ணி ஊத்திடுவேன் எப்படி வசதி” என கேட்க ஆனந்த் அதிர்ந்து உடனே தன்னிடம் இருந்த சிகரெட்டை அணைத்துவிட்டு 

   

”கொஞ்சமாவது உனக்கு என் மேல பாசம் இருக்கா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.