(Reading time: 24 - 48 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”அதையும் கொண்டு போ”

   

”யார் வந்திருக்கா“

   

”நீயே போய் பாரு தெரியும்” என சொல்ல ஆனந்தி பலத்த சிந்தனையுடன் வீட்டு வாசலுக்குச் சென்றாள்.

   

அதுவரை அவள் பேசியது ஆனந்துக்கே கேட்டது போல கோபத்தில் சிகரெட் ஒன்றை பற்ற வைத்து அதை புகைத்துக் கொண்டிருக்க அந்த புகையால் அங்கு பனிமூட்டம் போல தெரிந்தது அதில் ஆனந்தைக் கண்டதும் ஆனந்தி அதிர்ந்து அலறினாள்

   

”ஐயோ பேய் பேய்” என அலற வெங்கடேசனுக்கு வேடிக்கையாக இருந்தது, அவசர அவசரமாக அவளிடம் சென்றான் அதற்குள் ஆனந்தோ தன்னைச் சுற்றியிருந்த புகையை ஒதுக்கிவிட்டு ஆனந்தியிடம்

   

”அக்கா” என கோபமாக அழைக்க அதில் அவள் சற்று நிதானித்தாள்

   

”நீ பேயா”

   

”அக்கா” என இன்னும் கோபத்துடன் அழுத்தமாக அழைக்க அவளோ நம்பவில்லை, அவனை தொட்டு பார்த்து உறுதி செய்துக் கொண்டவள் அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்துவிட்டு

   

”என் உடன்பிறப்பே இன்னுமா உசுரோட இருக்க“

   

”ம்க்கும் விட்டா நீயே எனக்கு கல்லறை ரெடி பண்ணுவ போல இருக்கே” என சொல்லியபடியே அவளின் கையில் இருந்த காபியை வாங்கிக் கொண்டு குடித்தான்.

   

”உனக்கு லவ் பெயிலியர் அதனால நீ சூசைட் பண்ணிக்கிட்டதா கேள்விப்பட்டேனே”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.