ஒருபக்கம் தாஸின் நிலையை நினைத்து கவலையாகவும் சரண்யாவை நினைத்து சிரிப்பாகவும் இருந்தது. அவன் கண்கள் சரண்யாவை தேடிச் சென்றன.
அவள் அறையில் கோபமாக அமர்ந்திருந்தாள். அவளிடம் சென்றான் தேவா
”வாழ்த்துக்கள் சரண்யா” என சொல்ல அவளோ அவனை கோபமாக முறைத்துவிட்டு
”போங்க வெளிய” என கத்த அவனோ
”ஐ இதப்பார்றா, இது என் வீடும்மா நீதான் போகனும் அதுவும் உன் புருஷன் வீட்டுக்கு, அடடா உனக்கு மாமியார் வீடு இல்லையே நீ எங்க தங்குவ” என கேட்க அவளோ
”அவனை போய் என் தலையில கட்டிட்டு இப்ப கிண்டல் பண்றிங்களா”
“யார் நானா நீ பண்ண தப்புக்கான தண்டனைதான் இது சரியா, சரி சரி கிளம்பு கிளம்பு”
“எங்க,”
“உன் மாமியார் மாமனார் வீட்டுக்குத்தான்”
“அப்படி ஒரு வீடு இருக்கா என்ன”
“ஏன் இல்லை தாஸ் எனக்கு பையன் மாதிரி அப்ப நான்தான் உனக்கு மாமனார், கீர்த்தனா உனக்கு மாமியார் வா வா நம்ம வீட்டுக்குப் போலாம்”
“அந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன் போ வெளிய” என கத்த தேவாவை தேடி எதற்கோ வந்த தாஸ் அங்கு சரண்யாவின் கத்தலைக்கேட்டு எதேச்சையாக உள்ளே வந்தான். சரண்யாவோ
”உன்னை நான் வாழ விடமாட்டேன், கீர்த்தனாவையும் நிம்மதியா வாழ விடமாட்டேன்,