(Reading time: 8 - 15 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 44 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ப்ரியாவின் அதிர்ச்சி விக்கிராந்தை என்னமோ செய்தது.

   

“சாரி, உங்களை ஸ்டார்டில் செய்யனும்னு நினைக்கலை. நான் சாஃப்ட்டா பேசி இருந்திருக்கனும். நீங்க கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லவும் யோசிக்காம பேசிட்டேன்! சாரி!”

   

விக்கிராந்தின் மன்னிப்பை விட அவன் அதை மென்மையாக சொன்ன விதம் பிரியாவின் கவனத்தை கவர்ந்தது. அவளுக்கு இதுவரை பரிச்சயமே இல்லாத விதத்தில் புதியதொரு இதம் அவளுக்குள் பரவியது. ஆனால் அவன் எதை தெரியும் என சொல்கிறான் என்பதன் நினைவில் அவளுக்குள் கலவரமும் பெருகியது.

   

அவனின் மன்னிப்பை கவனிக்காதவள் போல, "எல்லாம் தெரியும்னா, என்ன அர்த்தம்?" என்றாள்.

   

ப்ரியாவை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த விக்கிராந்த், "எல்லாம் தெரியும்னு அர்த்தம்," என்றான் மெதுவாக.

   

ப்ரியாவின் முகம் கறுத்தது! தலையை குனிந்துக் கொண்டு மடியில் இருந்த ஹான்ட்பேகின் கைபிடியை திருகியவள்,

   

"யார் சொன்னது?" என மெல்லியக் குரலில் கேட்டாள்.

   

"பெரியம்மா!"

   

"ஓ! அப்போவே நீங்க இந்த கல்யாணப் பேச்சை நிறுத்தி இருக்கலாமே?"

   

"ஏன்?"

   

"ஏன்னா?"

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.