அந்த குரல் ப்ரியாவை அமைதிப் படுத்துவதற்கு பதில் கோபப் படுத்தியது!
"என்ன பேசனும்? பேசி என்ன ஆகப் போகுது? இன்னைக்கு அது இதுன்னு பரிதாபப் பட்டு வசனம் பேசுற நீங்க, நாளைக்கு முன்னாடி நடந்ததை வச்சு குத்தி காட்ட மாட்டீங்களா, ஒரு வார்த்தை கூட அதைப் பத்தி பேச மாட்டீங்களா? தப்பா சொலல் மாட்டீங்களா??? எனக்கு இதெல்லாம் வேண்டாம்!"
விக்கிராந்த் உடனே பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்!
அவனின் அமைதியை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல், "என்ன அமைதியா இருக்கீங்க? நான் சொன்னது சரி தானே? இப்போவே இதை எல்லாம் நிறுத்திடலாம். இந்த கல்யாணத்தினால பிரச்சனை மட்டும் தான் வரும்," என்றாள் ப்ரியா.
“கல்யாணம் பண்ணிக்காம இருந்தா பிரச்னையே வராதா ப்ரியா??”
“ப்ச்... நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரியலைன்னு சொல்லாதீங்க!”
“புரியுது, புரியாம எல்லாம் இல்லை, ப்ரியா! லைஃப்ல எல்லா விதமான ரிலேஷன்ஷிப்லேயும் ட்ரஸ்ட் வேணும். அதுவும் ஹஸ்பன்ட் ஒய்ஃப் நடுவே ரொம்ப அதிகமான ட்ரஸ்ட் வேணும். எனக்கு உன் மேல பரிதாபம் எல்லாம் கிடையாது! உன் கடந்த வாழ்க்கைப் பத்தி தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே எனக்கு உன்னை பிடிச்சிருந்தது, ரொம்ப பிடிச்சிருந்தது. என் வருங்கால மனைவி எப்படி இருக்கனும்னு நான் நினைச்சேனோ அந்த மாதிரி என் கண்ணுல பட்ட ஒரே ஒருத்தி நீ தான்! என் கனவு...”
அவனை தொடர்ந்துப் பேச அனுமதிக்காமல், “ப்ச்... இதெல்லாம் இப்போ பேச வேண்டிய அவசியம் இல்லை! உங்க வருங்கால மனைவி மாதிரின்னு நீங்க நினைக்குற மாதிரி எனக்கும் ஏதாவது மனசுல தோணனும் தானே? இந்த கல்யாணப் பேச்சை நிறுத்திடுங்க, அதான் சரி!” என படபடத்தாள் ப்ரியா!