ப்ரியா விக்கிராந்தை அடிபட்டப் பார்வை பார்த்தாள்!
அவன் சொன்ன 'ஸ்டுபிட்'டுக்கான பார்வை அது என்று புரிந்தும் அவன் அமைதியாக இருந்தான். அவன் விருப்பப்பட்டு அதை சொல்லவில்லை! ப்ரியாவை ‘ஸ்டுபிட்’ என நினைத்தால் அவன் தான் முட்டாள்!!! ஆனால் விக்கிராந்த் இது எதையும் வாய் திறந்து சொல்லவில்லை! ப்ரியா கோபப்பட்டால் படட்டும், தன் உணர்வுகளை அவள் கொஞ்சம் கொஞ்சமாகவாவது வெளிப்படுத்துவது தான் சரி என யோசித்து அமைதியாகவே இருந்தான்!
அவனை ஆச்சர்யப்படுத்துவதுப் போல, அவனின் பேச்சிற்காக கோபத்தை தொடராமல், "இதெல்லாம பேச நல்லா இருக்கும், வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராதுங்க," என சொல்லி தன் ‘பாயின்டி’லேயே குறியாக இருந்தாள் ப்ரியா!
"இல்ல ப்ரியா, உனக்கு நடந்த அந்த வையலன்ட் இன்சிடன்ட் ஒரு விபத்து. அவ்வளவு தான்! உனக்கு வேணும்னா சொல்லு, டாக்டரை போய் பார்க்கலாம், கவுன்சிலிங் போகலாம்! ஆனால் தனியா தான் இருப்பேன் கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு சொல்றது உனக்கு நீயே இன்னும் அதிகமா கொடுத்துக்குற பனிஷ்மென்ட்டா தான் எனக்கு தெரியுது. நீ இப்படி கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்லும் போது, எனக்குள்ளே வேற மாதிரி குற்ற உணர்ச்சி வருது தெரியுமா?"
ப்ரியா புரியாமல் கேள்வியுடன் விக்கிராந்தை மீண்டும் பார்த்தாள்.
புரிந்துக் கொண்டவனாக விக்கிராந்தே விளக்கம் கொடுத்தான்!
"நான் கல்யாணத்துக்காக எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்தேன். ஆர்த்தியை பார்த்தப்போ வாயில கொசு போனா கூட தெரியாத மாதிரி வாயைப் பிளந்துப் பார்த்தேன்! அவளை தான் கல்யாணம் செய்துக்கனும்னு நினைச்சேன், ஆசையும் பட்டேன்! சரி வரலை, அவ, அவ வழியைப் பார்த்துட்டு போயிட்டா. ஆனால் தெரிஞ்சே மனசுல இன்னொருத்தி மேல ஆசைப் பட்டு கரை படிஞ்ச நானே எந்த விதமான கில்டினஸும் இல்லாமல் ஈஸியா இன்னொரு கல்யாணத்தை பத்தி யோசிக்கும் போது, தெரியாம கூட மனசறிஞ்சு எந்த தப்பும் செய்யாத நீ கல்யாணமே வேண்டாம்னு எதுக்கு நினைக்குற? உன் முன்னாடி நான் தான்