தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 16 - சசிரேகா
சோனா தனக்கு அளித்த 1000 ரூபாயை பயன்படுத்தி என்னவெல்லாம் வாங்க வேண்டும் என ஒரு லிஸ்ட் தயாரித்தாள். அதன்படி அவள் சூப்பர் மார்க்கெட்டிற்குள் சென்றாள். அங்கு அவளுடன் வேலைக்காரனும் வந்தான்.
அந்த சூப்பர்மார்க்கெட்டில் சோனா சிறிய சிறிய பாக்கெட்டுக்களாகவே பொருட்களை வாங்கினாள். அவள் செய்யும் மேல் நாட்டு பாணி உணவு முறைக்கு தேவைப்படும் சாஸ் சீஸ் பன்னீர் பிரட் முட்டை மற்றும் காய்கறிகள் என அனைத்தையும் தரமானதாக வாங்கி முடித்தாள்.
பில்லும் போடப்பட்டது. அவள் வாங்கிய பொருட்களுக்கு 1700 பில் போட்டனர் கடையாட்கள். உடனே சோனா தான் வாங்கிய பொருளில் சில அவசியமானதை மட்டும் வைத்துக்கொண்டு மிச்சத்தை திரும்பி வைத்துவிட்டு மீண்டும் பில் போட சொன்னாள். கடையில் இருப்பர்களும் பில் போட இம்முறை 1300 என வரவும் திரும்பவும் சோனா தான் வாங்கிய பொருட்களை பார்த்தாள்.
எல்லாமே தேவையானதாகவே இருக்க அவள் தன்னிடம் இருந்த 1000 ரூபாய் பணத்தையும் வேலைக்காரனிடம் கேட்டு 300 ரூபாயையும் சேர்த்து கடையில் கொடுத்துவிட்டு பொருட்களுடன் காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தாள். அவள் சரியாக 1 மணி நேரத்திற்குள்ளேயே வந்துவிட்டாள். அனைத்தும் ஒரே கடையில் வாங்கினதால் அலைச்சல் இல்லாமல் போனது. வீட்டுக்குள் வந்த சோனா ஹாலில் இருந்த தாத்தாவிடம்
”தாத்தா இந்தாங்க பில்” என நீட்ட அவரும் அதைப்பார்த்தார் 1300 என காட்டவும்
”என்னாச்சி சோனா உன்னால 1000 ரூபாய்க்குள்ள பொருட்களை வாங்க முடியலையா”
“தாத்தா நான் முதல்ல அதிகமாக எடுத்தேன் 1700 வரவும் மறுபடியும் நான் வாங்கின பொருட்கள்ல இருந்து கொஞ்சம் எடுத்துட்டு பில் போட்டு பார்த்தேன். 1300ன்னு வந்துச்சி. அதுக்கு மேலயும் பொருட்களை வாபஸ் கொடுக்கலாம்னா எல்லாமே தேவையானதா இருந்திச்சி தாத்தா அதான் வாங்கிட்டேன்”