முதலில் மளிகை கடைக்கு சென்றாள். அவள் செய்யும் நான்வெஜ் ஐட்டத்திற்கு ஏற்றவாரு தேவையான மளிகை பொருட்களை குறைவாகவே வாங்கினாள். இருந்தாலும் அதற்கே 800 ரூபாய் ஆகிவிட்டது அடுத்து காய்கறி வாங்க சென்ற இடத்திற்கு பக்கத்தில் அசைவக்கடை இருக்கவும் அதற்குள் நுழைந்தவள் அங்கிருந்த மட்டன் சிக்கன் பிஷ் இறால் சுறா என தனக்கு பிடித்த ஐட்டங்களை வாங்கினாள். அதுவே 1000 ரூபாய் ஆக அதை வேலைகாரனிடம் கேட்டு பணத்தை வாங்கிக் கொடுத்தாள்.
அடுத்து காய்கறி கடைக்கு சென்றவள் பேருக்கு ஏதோ காய்கறிகள் வாங்கினாள். அதற்கு 300 ரூபாய்கள் ஆனது. அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. ஆக மொத்தம் 2100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவள் தான் வாங்கி வந்த பொருட்களை பற்றியும் அதற்கான பில்லையும் தாத்தாவிடம் தந்தாள்
”இந்தாங்க தாத்தா பில்” என அவள் 3 செட் பில் தர தாத்தாவும் கவனமா அதை பார்த்துவிட்டு ரிஷியிடம் தந்தார் .அவனும் அந்த பில்களை பார்த்துக்கொண்டிருந்தான்.
”சரிம்மா இப்பவே டைம் ஆயிடுச்சி போம்மா போய் டிபன் பண்ணு சீக்கிரம் போ” என சொல்லிவிட்டு அனுப்பிவைத்தார். அவளும் மகிழ்ச்சியாக பிஷ் வைத்து சீக்கிரமாகவே ஒரு கிரேவி செய்து அதற்கு தோசை ஊற்றி வைத்துவிட்டாள்.
அவளுடன் வந்த வேலையாளிடம் இங்கிருந்து போனதிலிருந்து என்னென்ன நடந்தது என ஒன்றுவிடாமல் தெரிந்து கொண்டு அவனிடம் தந்த மீதமான பணத்தை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவிட்டார் தாத்தா. அடுத்து நந்தினி வீட்டை விட்டு சென்ற சில நொடிகளில் டிரைவர் அவளிடம்
”அம்மா எங்கம்மா போகனும்” என கேட்க அவளுக்கு எங்கு செல்வது என தெரியவில்லை.
”எனக்கு இந்த ஊரை பத்தி எதுவும் தெரியாதே எந்த கடை எங்க இருக்கும்னு தெரியாது இப்ப என்ன செய்றது” என சொல்லியவளை கண்டு வண்டியை ஓரம்கட்டி நிறுத்தினான் டிரைவர்
நந்தினியும் என்ன செய்வது என தெரியாமல் காரை விட்டு இறங்கியவள் பக்கத்தில் இருந்த