ரூபாய்க்கான பொருட்களுடன் வீடு வந்து சேர்ந்தாள்.
மளிகைக்கடையில் தந்த பில்லையும் சந்தையில் காய்கறி கடைக்காரன் கொடுத்த பில்லையும் தாத்தாவிடம் நீட்டினாள் வந்தனா. அதைப்பார்த்த தாத்தா
”பரவாயில்லையேம்மா 5 ரூபாய் மீதம் பண்ணியிருக்க சரி சரி நல்லது சோனா அப்பவே வந்துட்டா நீ லேட்டு போம்மா போய் டிபன் பண்ணி முடி மிச்சத்தை பொறுமையா பேசிக்கலாம்” என சொல்லிவிட்டு அவளை அனுப்பிவிட்டு அவளுடன் வந்த வேலையாளிடம் இங்கிருந்து போனதிலிருந்து என்னென்ன நடந்தது என ஒன்றுவிடாமல் கேட்டு தெரிந்து கொண்டு அவனிடம் தந்த பணத்தை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவிட்டார் தாத்தா. வந்தனாவும் அவசரமாக டிபன் செய்ய ஆரம்பித்தாள்.
அடுத்து மிருதுளா காரில் செல்லும் போதே தன்னுடன் வந்த வேலையாளிடம் அதிகாரமாக பேசினாள்
”நீ அந்த வீட்ல என்ன வேலை செய்ற”
“வீட்டு வேலைங்க”
“அதான் என்ன வேலை”
“கடைக்கு போற வேலை வர்ற வேலைங்க”
“சரி எந்நெத்த கடைக்கு போவ”
“பல வருஷங்களா போற கடைகளுக்கு போவேன்ங்க”
“அப்ப சரி இப்ப நீ வழக்கமா போற மளிகை கடை, காய்கறி கடைகளுக்கு என்னை கூட்டிட்டு போ நான் சாமான்கள் வாங்கனும்” என சொல்ல அவனும் டிரைவரிடம் சொல்லி ஒவ்வொரு கடையாக அழைத்துச்சென்றான்.