பொருட்களை பற்றிக்கேட்க அவளும் நடந்ததை அப்படியே சொன்னாள். அதைக்கேட்டு 3 பெண்களுக்கும் என்றுமே வராத புதிய பொறாமைக் குணமும் வயிற்றெரிச்சலும் வந்து மானசீகமாக அவர்கள் நந்தினியை வெறுக்க தொடங்கினார்கள்.
அதைப்பற்றி எதுவும் அறியாத நந்தினியும் நைட் டின்னருக்கும் சேர்த்து தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டவள் தாத்தாவிடம் சொல்லிவிட்டு மதிய சமையலை செய்ய சென்றுவிட்டாள்.
தாத்தாவும் அவள் விட்டுச்சென்ற பொருட்களை எல்லாம் வேலையாளிடம் சொல்லி ஸ்டோர் ரூமில் அடுக்க வைத்தார்.
மதியத்திற்கு சமையல் தடல் புடலாக செய்தாள் நந்தினி. இன்று அவள் புதிய மளிகை கடையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து வழக்கம் போல் சாதம் சாம்பார் காரக்குழம்பு ரசம் தயிர்சாதம் 2 வகை கூட்டு செய்தவள் பாயாசம் செய்திருந்தாள்.
அவள் செய்வதைப்பார்த்து பொறாமையுடன் மற்றவர்களும் மதிய சமையலை செய்து முடித்தார்கள்.
மணி 2 ஆனது. வீட்டில் இருந்த அனைவரும் சாப்பிட அமர்ந்துவிட சோனா பரிமாறினாள்
நந்தினியின் மீதான கோபமோ இல்லை பொறாமையோ எதுவோ ஒன்று அவளது சமையலை கெடுத்து வைத்திருந்தது. அதிகப்படியான சீஸ் சாஸ் என ஊற்றி அவள் செய்த டிஷ்ஷை பார்த்த தாத்தா அவளிடம்
”என்னம்மா இதுதான் டிஷ்ஷா இது இப்படித்தான் இருக்குமா” என சந்தேகமாக கேட்க சோனா அதற்கு
”ஆமாம் தாத்தா” என பொய்யை சொல்ல அவரும் நம்பி ஒரு வாய் சாப்பிட்டவர் முகத்தை சுழித்தார்
”என்னம்மா ஆச்சி காலையிலதான் நீ செய்த சமையல் நல்லாயிருக்குன்னு சொன்னேன் ஆனா