(Reading time: 28 - 56 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“சரிம்மா சரி போம்மா போய் டிபன் பண்ணு” என சொல்ல அவளும் தான் கொண்டு வந்த சாமான்களை வேலையாட்கள் உதவியுடன் எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றவள்.

   

அவர்களிடம் தந்து அடுக்க சொல்லிவிட்டு அவசரமாக டிபன் செய்ய ஆரம்பித்தாள்.

   

அவளுடன் வந்த வேலையாளிடம் தனியாக அழைத்து இங்கிருந்து போனதிலிருந்து என்னென்ன நடந்தது  என ஒன்றுவிடாமல் கேட்டு தெரிந்து கொண்டு அவனிடம் தந்த பணத்தை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவிட்டார் தாத்தா. 

   

வந்தனா காரில் செல்லும் போதே தன் தாயிடம் உதவி கேட்டாள்.

   

”ஹலோ” என தன் தாய்க்கு போன் செய்து பேசினாள்

   

”அம்மா”

   

“சொல்லும்மா”

   

“அம்மா வீட்ல மளிகை பொருள் அரசி பருப்பு காய்கறி எல்லாம் தீர்ந்து போச்சி வாங்கனும். கையில 1000 ரூபாய்தான் இருக்கு அதுக்குள்ள நான் வாங்கனும் எந்த கடையில வாங்கினா சீப்பா முடியும்ன்னு சொல்லேன்” என சொல்ல வந்தனாவின் தாயும் அவருக்கு தெரிந்த ஹோல் சேல் கடைகளை பற்றி கூறவும் அவளும் போனை வைத்துவிட்டு டிரைவரிடம் சொல்லி அந்தந்த கடைகளுக்கு சென்றாள். 

   

சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றால் விலை அதிகமாகும் என சாதாரண மளிகை கடைக்கு சென்று தான் வாங்க நினைத்ததை 100 கிராம் கால் கிலோ என்ற ரீதியில் ஹோல் சேலாக பேக்கெட் ஐட்டமாக இல்லாமல் வாங்கி முடித்தாள். காய்கறிகளையும் சந்தையில் வாங்கிக்கொண்டாள். 

   

அரிசி பருப்பு போன்ற மளிகை ஐட்டங்களையும் அவள் பார்த்து பார்த்து பக்குவமாக வாங்கியதால் அவள் தன்னிடமிருந்த 1000 ரூபாயில் 5 ரூபாய் மட்டும் மீதி வந்தது மீதி 995 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.