(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”அப்ப எனக்காக வரமாட்டீங்களா தாத்தா”

   

“உனக்காக நான் செஞ்சது எல்லாம் போதும், இனிமே உனக்கு செய்ய செய்ய உன் திமிருதான் அதிகமாகும், அதனால நான் என் மாப்பிள்ளைக்குதான் செய்வேன்”

   

“ஒரு ஊமையை மாப்பிள்ளையா சொல்லிக்கறீங்களே வெட்கமாயில்லை” என சரண்யா பேசவும் தாஸ்க்கு சுர்ரென்றது. அவன் முறைக்க தேவா அவனை கட்டுப்படுத்தினான்

   

”தெருவில வேணாம் எதுவாயிருந்தாலும் 4 சுவத்தில செஞ்சிக்கடா” என சொல்ல அதைக்கேட்டு சரண்யா பயந்தாள். கீர்த்தனா இருவருக்கும் ஆரத்தி எடுக்கவே முதல் ஆளாக உள்ளே சென்ற சரண்யாவைக் கண்ட தாஸ் தேவாவிடம் 

   

”நீ வைத்தி தாத்தா வீட்ல இரு, நாளைக்கு காலையில வா” என சைகை செய்ய அவன் உடனே புரிந்துக் கொண்டு கீர்த்தனாவிடம்

   

”கீர்த்தனா நீ வா நாம என் அப்பா வீட்டுக்குப் போலாம்”

   

“ஆனா எதுக்கு இப்பதானே அவங்க வந்தாங்க”

   

“அவங்க இருக்கட்டும் நாம நாளைக்கு காலையில வரலாம் வா” என சொல்ல தாத்தா வியந்தார். தேவாவோ தாஸிடம்

   

”வாழ்த்துக்கள் நண்பா” என சொல்ல அவனோ முறைத்துவிட்டு நேராக வீட்டுக்குள் சென்றவன், வாசக்கதவை அறைந்து சாத்திவிடவே தாத்தாவுக்கு திக்கென்றது

   

”தேவா என்ன இது தாஸ் பண்றத பார்த்தா பயமா இருக்கே, அவன் சரண்யாவை எதுவும் செய்யமாட்டானே”

   

“அவன் எதுவும் செய்ய மாட்டான் தாத்தா, நீங்க பயப்படாதீங்க அவன் நல்லவன் மிஞ்சி 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.