(Reading time: 8 - 16 minutes)

 

ம்ம அப்பாக்கள் கூட ப்ரெண்ட்ஸ் போல இருக்கே?"

"நானும் அப்படி தான் நினைக்கிறேன்"

"ஆனா எனக்கு தெரியம் எப்படிப்பா?" என்று அவள் சரண் ராஜிடம் வினவ,

"அது ம்மா"

“அட அண்ணே நீங்களா? எப்படி இருக்கீங்க? அண்ணி உங்கள பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு" என்றபடி திவ்யா வந்தார்.

"ஆமாம் அண்ணி, நாங்க நல்ல இருக்கோம் நீங்க பசங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?"

"நாங்க நல்ல இருக்கோம், இது எங்க அண்ணன் குடும்பம், எங்க அண்ணன் அண்ணி மகேஷ்- ரஞ்சனி ,அப்புறம் அது என் மருமக ஆராதனா இது அவ வீட்டுக்காரர் ஸ்ரீகாந்த், இது தான் என் தங்க  மருமகன் ஆதித்யன், இவன தான் எங்க பாப்பாவுக்கு நிச்சயம் பண்ணிருக்கோம், இப்போ தான் பங்க்ஷன் முடிஞ்சு வரோம்" என்று ஆதியின் கையை பிடித்துக் கொண்டு பெருமையாக கூறினார் திவ்யா.

எல்லாரும் புன்னகைக்க ஆதி மட்டும் தர்ம சங்கடத்துடன் நெளிந்து கொண்டு இருந்தான்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தது மூன்று பேர். (அதில் ஒருத்தர் யாருன்னு இப்போ சொல்றேன், மத்தது ஷ்ஷ்ஷ்ஷ்!!! அது வேற யாரும் இல்லைங்க நம்ம ரகு தான்)

தன் காதுகளையே நம்ப முடியாமல் மதுவை திரும்பி பார்த்தான் ரகு!!

அவன் ஒன்று நினைத்து இருக்க, இங்கே வேறொன்று நடக்கிறதே!!

அவன் திரும்பி தன் அம்முவை பார்க்க, அவள் எல்லாம் தெரியும் என்பது போல ஒரு பார்வை பார்க்க, இருந்த கோபமெல்லாம் ஆதி மீது திரும்பியது.

 "இனி என் அம்மு லைப்ல உன்ன வரவே விட மாட்டேன் டா உன்னால அவ பட்ட கஷ்டம் எல்லாம் போதும்"  என்று சூளுரைத்து கொண்டான்.

"ஐயோ அம்மா ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா இவங்க எப்பவும் இப்படி தான் மாறவே மாட்டாங்க" என்று ஒரு புன்னகையுடன் ஸ்வேதா கூற, அனைவரும் சிரித்தனர்.

மதுவை கண்ட திவ்யா, "இது நம்ம மது குட்டியா எப்படி வளந்துட்ட பாருங்க,அழகா இருக்க, ஏன் அண்ணி இவளுக்கும் நம்ம பாப்பா வயசு தானே?" என்று நெட்டி முறித்தார்.

"ஆமாம் அண்ணி, இது திவா, இது தன்யா அப்புறம் இது ப்ரிஷன் அவங்க பையன்"

"அப்படியா டேய் என் பொண்ண கட்டிகிறேன்னு சொல்லிட்டு, இப்போ யாரையோ கட்டிக்கிட்டு வந்து நிக்கற?" என்று அவனை வம்பிழுக்க,

"நீங்களும் தான் உங்க பொண்ணுக்கு நிச்சயம் பண்ணிட்டு வந்து நிக்கறிங்க, இப்போ கூட ஒன்னும் கேட்டு போகல சொல்லுங்க இவள டைவர்ஸ் பண்ணிட்டு அடுத்த முகுர்த்ததுல உங்க பொண்ண கட்டிக்கிறேன்" என்று அவன் தன்யாவை பார்த்த படி சொல்ல,
மெலிதாக சிரித்த போதும் கணவனை கண்ணாலேயே திட்டி கொண்டிருந்தாள்.

"அட போக்கிரி நீ இன்னும் மாறல டா" என்று தன்யாவின் தோளில் தூங்கி கொண்டிருந்த ப்ரிஷனை தூக்கி செல்லம் கொஞ்சினார்.

அனைவருக்கும் சேர்த்து அவரே பேசிகொண்டிருக்க அனைவரும் அமைதியாக அவரை பார்த்து கொண்டிருந்தனர்.

ஆதியும் மதுவும் ஒருவரை ஒருவர் பார்க்க அதை பார்த்த இருவர் யோசனையுடன் இருக்க, ஆதி ரகுவிற்கு பின்னால் பார்வையை செலுத்த, அங்கே பிரகாஷ் நின்றிருந்தான்.

"இவனா?" என்று அவன் மனதில் கோபத்துடன் நினைக்கும் போதே,

"இது யாரு அண்ணா?" என்று திவ்யா கேட்க,

"அவரு நம்ம மதுவ பொண்ணு கேட்டு வந்தாரும்மா, எங்க எல்லாருக்கும் சம்மதம், மது சரின்னு சொன்ன உடனே கல்யாணம் தான்"

"அப்போ கூடிய சீக்கிரம் நீங்களும் கலையான சாப்பாடு போடா போறீங்க"

"அதுக்கு என்ன ம்மா போட்ருவோம்"

"ஏன் டா எனக்கொரு யோசனை, நம்ம ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்தையும் ஒன்ன ஒரே மேடைல வெச்சா என்ன?" என்று யோசனையாய் சரண்ராஜ் கேட்க,

எல்லாருக்கும் சம்மதம்ன்ன எனக்கும் டபுள் ஓகே டா" என்று சிரித்தார் மூர்த்தி.

"என்ன?!" என்று அதிர்ச்சியாக ஆதியும் மதுவும் தங்களுக்குள் கேட்டு கொண்டு ஒருவரை ஒருவரை பார்த்தனர்.

எல்லாரும் என்மேல கொலைவெறில இருப்பிங்க புரியுது... மூர்த்திக்கும் சரன்ராஜுக்கும் எப்படி பழக்கம்? மது பிரகாஷ் கிட்ட என்ன பேசினா? பிரகாஷ் ஏன் அமைதி ஆகிட்டான்? ரகு என்ன நினைசிருந்தான்? ஆதி ஸ்வேதா நிச்சயம் பற்றி ரகுவ தவிர அதிர்ச்சியான ரெண்டு பேர் யாரு? ஆதியும் மதுவும் பார்த்துகிட்டது யாரு யோசனையோட பார்த்தாங்க? ரகு இனி ஆதிய மது லைப்ல வர விடுவானா? சரண்ராஜ் ஆசை படி ரெண்டு திருமணமும் ஒரே மேடையில் நடக்குமா? இப்படி உங்களுக்கு இருக்க எல்லா கேள்விககளுகும் அடுத்தடுத்த அத்தியாயத்தில் விடை இருக்கும் ;) ;)
ஐயோ குறைவா பக்கங்கள் கொடுத்ததுக்கு என்னை திட்டி தீர்த்த என் செல்லங்களுக்கு ஸ்பெஷல் சாரி... ஹிஹிஹிஹி..... இப்போதைக்கு டாட்டா பை பை....

காதல் பெருகும்… 

Episode # 06

Episode # 08

{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.