மதுவும் மேகாவும் அவர்களின் RJ பணி பற்றிய சுவாரசியமான அனுபவங்கள், அவர்கள் சந்தித்த பிரபலங்கள் என சொல்லி கொண்டிருக்க, ஸ்வேதா விழி அசைக்க மறந்து ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்தாள்.
பெரியவர்கள் ஒரு புறம், அவர்கள் பழங்கதையை பேசி கொண்டிருக்க, ஐயோ பாவமாக அமர்ந்திருந்த நம்ம 3 ஹீரோவும் தான்.....
( அதாங்க ஆதி, ரகு அப்புறம் பிரகாஷ், வெயிட் வெயிட் பிரகாஷ் ஹீரோவா???? ஹீரோ அன்டி ஹீரோ எது வேணும்னாலும் வெச்சுகோங்க... ஹிஹிஹி)
ஆதி தன் மடியில் தூங்கி கொண்டிருந்த ஆரத்ரிகா (ஆராதனா-ஸ்ரீகாந்தின் மகள் ஆதியின் குட்டி ஏஞ்சல்) மீது கவனம் செலுத்துவது போல் அவளை பார்த்து கொண்டிருந்தாலும் அவன் கடைக்கண் பார்வை மொத்தமும் மது மேல் தான் இருந்தது.
சற்று முன்பு உயிர் தோழியர் ஆயிருந்த மூவரும், சிறிது நேரம் நடந்து விட்டு வருவதாக கூற, ரகுவும் வருகிறேன் என எழுந்தான். அதற்குள் ப்ரிஷன் விழித்து அழ துவங்க, அந்த சத்தத்தில் ஆரத்ரிகாவும் எழுந்து விட்டாள்.
எழுந்து மலங்க விழித்தவள், அங்கு இருந்த அனைவரையும் பார்த்து விட்டு மெல்ல ஆதி மடியில் இருந்து இறங்கினாள்.
தன்யாவின் மடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்த ப்ரிஷனிடம் வந்தவள். அவன் கைகளை பற்ற அழுகையை நிறுத்தி விட்டு நீர் தேங்கிய கண்களுடன் அவளை பார்த்தான் நம்ம ஜூனியர் ஹீரோ.
எல்லாரும் அவர்களை பார்க்க,
"ஏன் அழுவுற"
".........."
"அழுவ கூடாது, அழுத மம்மி குட் கேர்ள் இல்லன்னு என்னை சொல்வாங்க"
"......" (இவ யாருடா இவ நானே தூக்கம் போய்டுச்சு இவங்க அளப்பர தாங்கலன்னு அழற மாதிரி சீன் போட்ட தூங்க வைப்பாங்க நு பாத்தா இது எங்க இருந்து வந்துச்சு)
"நீ குட் பாய் தான?"
"ஆமாம், நான் ரொம்ப குட் பாய் தெரியுமா, அதுனால தான் நான் சூல்க்கு (ஸ்கூல்) எல்லாம் போக போறேன்" என அவர்கள் மும்முரமாக டிஸ்கசனில் இறங்க,அதை பார்த்து சிரித்த வாறே மூவரும் நடந்தனர்.
அவர்களுக்கு சற்று தள்ளி ஆதியும் ரகுவும் நடக்க, அதை பார்த்தவாறு அமர்ந்திருந்த பிரகாஷ் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி விட்டான்.
காரை எடுப்பதற்காக பார்கிங் ஏரியா சென்றவன், சின்ன முனகல் சத்தம் கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லாமல் போக தன் காருக்குள் ஏற எத்தனிக்க, மீண்டும் சத்தம் அதுவும் ஒரு பெண்ணின் குரல் கேட்டு பக்கத்துக்கு காரின் அருகில் சென்றவன் அங்கு முழு போதையில் தன்னை மறந்து உளறிக் கொண்டு இருந்தவளை கண்டு ஆதிர்ச்சி அடைந்தான்.
“நீயா?!”
(அது யாருன்னு அப்புறம் பார்போம், நம்ம 3 ரோசஸ் என்னை பண்றாங்க நு பாக்க வேண்டாமா, லெட்ஸ் கோ)
"உங்களுக்கு எப்படி மது, இப்படி எல்லாமே வித்யாசமா பண்ண பிடிக்குது"
மது மெல்லிய புன்னகையை தர, மேகா
"நல்ல கேட்ட போ, இவ எப்பவும் இப்படி தான் ஸ்கூல் படிக்கும் போதே இது ஒரு அருந்த வாலு, ஆனா எல்லாமே பக்காவா இருக்கும், படிப்பு, கவிதை, கதை,பாட்டு, டேன்ஸ் நு... மேடம் தான் எப்பவும் பர்ஸ்ட்"
"சும்மா சொல்றா ஸ்வேதா, இவளும் தான் நல்ல படிப்பா ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப இண்டரஸ்ட், அண்ட் இவ தான் பர்ஸ்ட் RJ ஆனா, அதுக்கு அப்புறம் தான் நான் ஜாயின் பண்ணேன்"
"நீங்க ரெண்டு பேருமே இன்ட்ரஸ்டிங் தான், அண்ட் எவ்வளவு வருஷ பிரெண்ட்சிப் பாத்தா கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு"
"ஐயையோ வேண்டாம்மா, அல்ரெடி நிறைய பேரு எனக்காக சண்ட போட்ருக்காங்க" என மது மேகாவையும் ரகுவையும் பார்க்க,
"என்ன?"
"சொல்லிடவ மேகா"
"ஹே பிசாசு அடங்கு டி"
"அது வந்து.... "
என தொடங்கி கதையை மது சொல்ல மேகா வெட்கத்துடன் திரும்பி கொண்டாள்.
"பாருடா நம்ம மேகா வெட்கம் எல்லாம் படுவாளா? ஏன் மது இவ அவ்வளவு நல்ல பொன்னா?!" என ஆச்சரியமாக ஸ்வேதா கேட்க
"ச்சே ச்சே" என மது சொன்ன தொனியில் இருவரையும் முறைத்து பார்த்து விட்டு, பின் அவளும் அவர்கள் சிரிப்பில் இனைந்து கொண்டாள்.
"உன் ப்ரோக்ராம் எப்பாவது கேட்பேன் மது"
"ஒ தேங்க்ஸ் டா"
"அப்போ என்னோடது கேட்க மாட்டியா டி"
"ஐயோ உன்னொடதும் தான், ஆனா மது பண்ற லவ் ஷோ ஓட ஹைலைட்ஸ் யூ டியுப்ல ல அன்னைக்கு கேட்டேன் இட் வாஸ் அவ்சம் மது"
"ம்ம்ம்ம்ம்"
அவள் மௌனமானதும் எதற்காக என்று உணர்ந்த மேகா, அதை மாற்ற நினைத்து,
"லவ் ல ரொம்ப அனுபவுமோ? லவ் ஷிஒவ் மட்டும் தான் கேட்பிங்க போல"
"அப்படி எல்லாம் இல்லை" எனும் போதே அவள் கண்கள் வெட்கத்தில் மின்னி ஜொலித்தன.
"அப்போ கண்டிப்பா ஏதோ இருக்கு, சொல்லு சொல்லு" என்று ஆர்பரித்தால் மேகா.
அவன் மோதிரம் அணியும் பொது அந்த தொடுதலில், உரிமையில், பெருமிதத்தில் மயங்கி கனிந்து இருந்த அவள் பார்வையும் முகமும் மது மனதில் வந்து கண்ணாமூச்சி ஆட, அதை கவனியாமல்
"அது வந்து... எவ்வளவோ பேர் என்கிட்ட லவ் சொல்லிருகாங்க, ஸ்கூல் ல அப்றோம் காலேஜ்ல, பக்கத்துக்கு வீட்ல, டிராயிங் கிளாஸ்ல அப்படி இப்படின்னு, பர்ஸ்ட் நான் கொஞ்சம் அழகு.."
"ஹே நிறுத்து நிறுத்து கொஞ்சமா ரொம்ப அழகா இருக்க" என்று மேகா சொல்ல
சிறு வெட்கத்துடன் தொடர்ந்தாள்,
"அப்புறம் அப்பா, நல்ல பணம் ஒரே பொண்ணு நு நிறைய பேர் சம்மந்தம் பேச கூட வந்தாங்க, ஆனா எனக்கு விருப்பம் இல்ல,அப்போ தான் இந்தியா ட்ரிப் வந்தோம், இங்க வந்து ஆதி மாமாவ பார்த்தப்போ தான்..." என்று திரும்பி ரகுவுடன் பேசியபடி வந்த ஆதியை பார்க்க,அவனும் சரியாக இவன் புறம் திரும்பினான்.
அவனுடன் சிறு வயதில் விளையாடிய போது தெரியாத ஒன்று, அவனை விட்டு அமெரிக்கா சென்ற போது உணராத ஒன்று, அவனை பிடிதிருபதாக பெற்றோரிடம் சொல்லும் போது அறியாத ஒன்று, சில நாட்களுக்கு முன் அவனுடன் களித்த நேரங்களில் தோன்றாத ஒன்று இப்படி அனைத்திற்கும் சேர்த்து இப்போது எல்லாமே புரிந்து, தெரிந்து உணர்வு பூர்வமாக அவளை அலைகழிக்க, ஒரு புன்னகையுடன் அமைதியானாள்.