(Reading time: 8 - 16 minutes)

 ...எ...எது?"

"உன்னை கட்டிக்கிட்டா எனக்கு மாமா முறை தானே! அதான்...அப்படி சொன்னேன்!"

"உன் வாயில வசம்பை வச்சி தேய்க்க!"

"எது...ஏம்மா?"

"இப்போ தானேடா! ஊர்ல இருந்து வந்தேன்...உடனே, துரத்திவிட பார்க்கிறீங்க?"

"உன் இம்சை தாங்க முடியலையாம்!"

"உன் இம்சை தான் தாங்க முடியலை!"

"ஏன்?"

"எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்!"

"ஐ!!!ஆசையை பாரு...!இப்போதிக்கு பொண்ணு பார்க்க தான் வரறது... எப்போ பார்த்தாலும் அதே நினைப்பாவே சுத்தறது!!!"

"டேய்...வெறுப்பேத்தாதேடா!"

"ஐயோ! உங்களை போய் வெறுப்பேத்த முடியுமா?"

"விஷ்வா!"

"எஸ்..."

"நான் அது...வந்து!"

"புரியுது...புரியுது...என்ன தான் வாயாடி முனியம்மாவா இருந்தாலும் கல்யாணம் விஷயம்னு வந்தா பேச்சு வராம தான் தவிப்பாங்க!"

"விஷ்வா!"

"இருக்கட்டும் சிஸ்டர்....ஐ அண்டர்ஸ்டார்ன்ட்!"

"................."-விஷ்வா சிரித்தப்படியே சென்றுவிட்டான். வெண்ணிலா அவனை பார்த்தப்படி நின்றாள்.

காதல் விளையாடும் கண்ணாமூச்சியை பாருங்கள்!!!!

திருமணம் ஆன ஒருவன்,திருமணத்தை ஒதுக்கும் ஒருத்தி!!!

இருவருக்கும் நடுவில் தென்றல் வீசுமா?புயல் வீசுமா?என்ற குழப்பத்தில் நாம்!!!!

சூட்சுமமானது,காதலின் மூலம் அழகாக திரிக்கப்படுகிறதே!!!

திருப்புமுனைகள் அழகாக உருவாக்கப்படுகிறதே!!!

கத்தியில்லாமல், ரத்தமில்லாமல் அழகான யுத்தத்தினை காதலால் மட்டும் தான் நடத்த முடியும் போலும்!!!!

மனதோடு மாயமாக மர்ம முடிச்சினை காதலால் தான் போட முடியும் போலும்!!!

நித்தம் நித்தம் நினைக்க வேண்டாம் என்று ஒதுக்கினாலும்,நினைக்க தூண்டுகிறதே காதல் மனம்!!!!

நெகிழியில் நெஞ்சம் இருந்தாலும்,நெருப்பு தான் வேண்டுகிறது இம்மனம்...!

விசித்ரமான அவதாரமடா!!!

காதலின் அவதாரம்!!!

ம்மா!"-ரஞ்சித்

"என்னடா?"

"அம்மா! உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!"

"சொல்லுப்பா!"

"அம்மா...ஒரு முக்கியமான விஷயமா வெளியூருக்கு போகணும்!"

"என்ன விஷயம்?"

"ஒரு புராஜெக்ட்!"

"நாளைக்கு கார்த்திகா வராடா!"

"என் புராஜெக்ட் அவளுக்காக காத்திருக்காது!"

"ரஞ்சித்!"

"அம்மா...ப்ளீஸ்...எனக்கு இந்த வேலை முடிச்சே ஆகணும்!"

"வேற யாரையாவது அனுப்பு!"

"இல்லம்மா...நான் தான் டீம் லீடர் நான் போய் தான் ஆகணும்!"

"எப்போ?"

"நாளைக்கே!"

"ஒரு வாரம் கழிச்சி போ!"

"சான்ஸே இல்லைம்மா!"

"நீ வேணும்னே பண்ணுறியோன்னு தோணுது!"

"நீங்க அப்படி நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லைம்மா!"

"இப்போ! என்ன தான் சொல்ல வர?"

"நான் ஊருக்கு போகணும்!"-அப்போது,ராஜா அங்கே வந்தான்.

"சித்தப்பா!"

"ம்.."

"ஊருக்குப் போறீயா?"

"ஆமாடா!"

"என்னையும் கூட்டிட்டு போ!"

"ஏ...உனக்கு ஸ்கூல் இல்லை?"

"எனக்கு ஆன்வல் லீவ் விட்டுட்டாங்க!!!2 மாசம் லீவு!கூட்டிட்டு போ சித்தப்பா!"

"ம்...சரி நாளைக்கு ரெடியாகு!"

"ம்..சரி சித்தப்பா!"-என்று ரஞ்சித்தின் கன்னத்தில் முத்தமிட்டான் ராஜா.

"அப்போ! போக தான் போறீயா?"

"ஆமாம்மா!"

"சரி...உன் இஷ்டம்!"

"ம்..."

"எந்த ஊரு?"

"கோயம்புத்தூர்!"

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.