(Reading time: 17 - 33 minutes)

பாலா முன்னே செல்ல, வள்ளி அவளின் பின்னேயே மஞ்சரியின் வீட்டிற்குள் நுழைந்தாள்…

வா பாலா… வா வள்ளி… நானே உங்களை போன் போட்டு வர சொல்லணும்னு இருந்தேன்… என்றபடி விஜயா சொல்ல

என்ன ஆன்ட்டி… சொல்லுங்க… என்றாள் பாலா…

எல்லாம் நல்ல விஷயம் தான் பாலா… என்றார் விஜயா…

அந்த நல்ல விஷயத்தை சொன்னா நாங்களும் சந்தோஷப்படுவோம்ல ஆன்ட்டி… என்ற வள்ளியிடத்தில்,

உங்ககிட்ட சொல்லாமலா?... என்றவர் விவரத்தை சொல்ல…

இருவரும் தூக்கிவாரிப்போட்டவர்களாக மஞ்சுவைப் பார்க்க சென்றனர்…

மஞ்சுவின் அறையில்….

சிலை போல் அமைதியாக இருந்த மஞ்சுவை, ஹேய்… என்னடி என்ன நடக்குது இங்கே?... என்ற பாலாவின் குரல் கலைக்க…

அம்மா சொல்லியிருப்பாங்களே… என்றாள் மஞ்சரியும்…

என்ன மஞ்சு புரிஞ்சு தான் பேசுறியா?... எதுக்கு இவ்வளவு அவசரம்?...

நான் என்ன செய்ய வள்ளி?... நான் இது விஷயமா தான் அவர்கிட்ட பேசினேன்… அவர் என்ன சொன்னாருன்னு சொன்னேன்ல… சரி வீட்டுக்கு போயாச்சும் நிம்மதியா கொஞ்சமாச்சும் இருக்கலாம்னு நினைச்சு வந்தா இங்கே இப்படி குண்டை தூக்கி போடுறாங்க… நான் என்ன செய்ய வள்ளி… என்றவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க…

அதுக்காக… நீ உனக்கு விதிச்சது இதுதான்னு முடிவு பண்ணிட்டியா?... என்று பாலா கோபமாக கேட்க…

இதுதான் விதின்னா… அப்படியே நடக்கட்டும் பாலா… என்னை வேறெதும் கேட்காத… என்று சொல்லிமுடிக்கும்போது விஜயா உள்ளே வந்து, பாலா, வள்ளி,. அவளை கூட்டிட்டு வாங்கம்மா.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க… எனவும், பாலாவும் வள்ளியும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்… மஞ்சரியைத் தவிர…

பிறகு மஞ்சரியை அரை மனதோடு தயார் செய்தனர் இருவரும்…

பின்னர் மூவரும் கீழே வந்த போது, சில மணித்துளிகள் அப்படியே ஸ்தம்பித்து போயினர்…

மஞ்சரியோ கடவுளே ஏன் இப்படி என்று நொந்து கொள்ள… வள்ளியோ என்ன நடக்கிறது இங்கே… என்ற குழப்பத்தில் இருந்தாள்… பாலாவிற்கு நடப்பது நிஜம் தானா என்றிருந்தது….

ஏனெனில் அங்கு சபையில், பெரியவர்களுடன் அமர்ந்திருந்தது, வ்ருதுணன்…

மஞ்சரி வந்ததும், வாம்மா… எல்லாருக்கும் காபி கொடு… என்று விஜயா சொல்ல, மஞ்சரிக்கோ இது என்ன கொடுமை என்றிருந்தது…

மெல்ல அவள் அனைவருக்கும் கொடுத்துவிட்டு வ்ருதுணனுக்கும் கொடுக்க முயன்ற போது, வ்ருதுணன் அவளைப் பார்க்க அவளின் விழிகள் வெறுப்பையும், கசப்பையும் உமிழ்ந்தன…

ஹாய்… பிரெண்ட்ஸ்… கதையை படிச்சிட்டு யாரெல்லாம் ஷாக் + குழப்பமானீங்க… உண்மையை சொல்லணும் சரியா?...

ஹ்ம்ம்… நீங்க சொல்லுவீங்கன்ற நம்பிக்கையோட நான் உங்களை மறுபடியும் அடுத்தவாரம் மீட் பண்ணுறேன்… டாட்டா…

வரம் தொடரும்…

Episode # 04

Episode # 06

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.