நந்திதாவினுள் மெல்லிய எரிச்சலும், கோபமும் பொங்கும் போதே, அந்த வேறுபாடு புரிந்தது...
உதயின் பார்வை அவள் மீது இருந்தாலும் அவனின் கவனம் அவளிடம் இல்லை என்று தோன்றியது...
அவனின் கண்கள் சிந்தனையை காட்டியது.
ஏதோ சிந்தனையில் இருக்கிறான் போலும்... எங்கே பார்க்கிறான் என்ற உணர்வே இல்லாமல் அவனின் பார்வை இருக்கிறது!
அவள் தான் அவனை தவறாக நினைத்து விட்டாள்!
அவசரமாக பார்வையை திருப்பி நாகுவின் லேப்டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் ப்ரசென்டேஷனை பார்க்க ஆரம்பித்தாள்!
"ஹேய் நந்து! பர்ஸ்ட் டே எப்படி போச்சு? வேலை பிடிச்சிருக்கா?"
வேலையில் இருந்து திரும்பிய தோழியை பார்த்து ஆர்வத்துடன் கேட்டாள் துளசி.
"ரொம்ப ச
...
This story is now available on Chillzee KiMo.
...
தை திருகிய காமாட்சி,
"துளசி செஞ்சது தப்பே இல்லை! நீ பயங்கரமான ஆள் தான்!" என்றாள்.
"ஐயோ ஆன்ட்டி வலிக்குது விடுங்க..." என நந்திதா அலறிக் கொண்டிருக்கும் போது துளசி குழந்தையுடன் வந்தாள்.
நந்திதாவின் அலறலை கேட்டு அழுதுக் கொண்டிருந்த சாஹித்யாவும் அழுகையை நிறுத்தி பார்த்தாள்.