“வாங்க மாப்பிள்ளை.” ஆச்சர்யத்துடனே அழைத்தாள் வடிவு.
“என்னத்தை? உங்க மாப்பிள்ளையை பார்த்த உடனே என்னையெல்லாம் தெரியாதே.” குறைபட்டவள் காது சிவனேஸ்வரின் கைகளில் இருந்தது.
“வயசு வித்தியாசம் பார்க்காம என்ன இது விளையாட்டு?” அண்ணனாக கண்டித்தான்.
“அட சும்மா இருண்ணே! உன்னை விட முன்னாடியே அத்தைக்கு என்னைத் தெரியும். அதனால் கோவிச்சுக்க மாட்டாங்க. என்ன அத்தை? நான் சொன்னது சரிதானே?” சலுகையுடன் கேட்டவாறே உள்ளே நுழைந்தாள்.
“வாம்மா.” என்று அவளையும் அழைத்திருந்தாள் வடிவு.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அதுவும் எதிர்பாராத இடத்தில் அன்னையை சந்தித்த திகைப்பில் நின்றிருந்தாள் உமா.
“அம்மா!” அவளைக் கட்டிக் கொண்டாள்.
உள்ளேயிருந்து வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
பிள்ளை போல் அவரின் மடியில் படுத்து சலுகை கொண்டாடியவர்தானே. என்ன ஒன்று அவரின் பிள்ளைகளுக்கு இந்த கொடுப்பினை இல்லை. சாவித்திரி என்றுமே பிள்ளைகளை மடியில் போட்டு சீராட்டியதில்லை. தங்கள் பாட்டியின் சீராட்டில் வளர்ந்ததால் அவர்களுக்கும் இத்தகைய ஏக்கம் வந்ததில்லை. தன் மகனின் தலையை ஆறுதலாய் வருடினார்.