“இல்ல சார் நான் ஜாபை ரிசைன் பண்றேன்….என்ன ப்ரொசீரோ அதை சீக்கிரமா வந்து முடிச்சு தந்துடுறேன்… “ என்றாள்.
ஒரு கணம் மௌனம் அவர் புறம்.
“சரிமா என்னைக்கு வர்ற…? சீக்கிரம் ரெசிக்நேஷன் கொடுத்தன்னா நான் அடுத்தவங்கள கான்ஃபிடென்டா அப்பாய்ண்ட் செய்ய முடியும்…”
“ஓகே சார், சீக்கிரம் வர்றேன்…..”
“இன்னைக்கு தான ப்ரபாத் யூகே கிளம்புறார்? நாளைக்கு வாயேன்…இனி ஃப்ரீயாதான இருப்ப…?”
“சரி “ என முடித்தாள். ஜோனத் இன்று இரவு கிளம்புகிறான் என்பதை அவர் வாயால் கேட்க மகா கடுப்பாக இருக்கிறது. இந்த ஆள் குரல கேட்டாலே எரிச்சல்தான்….சீக்கிரமா போய் ப்ரோசீசர முடிச்சு கொடுத்துட்டு வல்லமை சேனலை அப்படியே மறந்தும் போகனும். நினைத்துக் கொண்டாள்.
You might also like - Manathora mazhai charal... A family oriented romantic story
நைட் ஃப்ளைட் ஜோனத்துக்கு. இன்னும் மூன்று வாரம் கழித்து தான் திரும்பி வருவான். அதன்பின்னும் உடனடியாக ஆஸ்ட்ரேலியா கிளம்ப வேண்டும் அது 4 மந்த்ஸ் ட்ரிப் எனவும் தெரியும்.
பிரிய நினைப்பவளுக்கு நியாயப் படி அவன் கிளம்புவது நிம்மதியாக இருக்க வேண்டும். இவளுக்கோ உயிர் வரை வலிக்கிறது. சுகவிதா அரணைப் பிரிந்து தவித்த விதம் ஞாபகம் வருகிறது. நாமளும் பேசாம குழந்தை வச்சுகலாமா? அவன் குழந்தை கூட இருந்தா தனியா இருக்ற மாதிரி தோணாதுல்ல? நினைவு ஒரு பறவை….எத்திசையிலும் பறக்கும். இப்போது அது சுக திசையில்….
எங்க குழந்தை எப்படி இருக்கும்? எங்க ரெண்டுபேருக்கும் கர்லி ஹேர் கிடையாது. சோ எங்க ஜூனியர்க்கு ஸ்ட்ரெயிட் ஹேர்தான் வரும்…எது எப்படியோ ஐஸ் அவன மாதிரிதான் இருக்கனும்…. காம்ப்ளெக்க்ஷன் ரெண்டு பேர்ல யார் மாதிரி இருந்தாலும் ஓகே… ஆனா நெத்தியும் ச்சீக் போன்ஸும் அவன மாதிரிதான் இருக்கனும்….அதுதான் அவன் ஒரு அழுத்தமான அமுக்குனினு தெளிவா காமிக்கும்…அது குழந்தைக்கும் வேணும்….நாடி அவனது தான்…..நோ காம்ப்ரமைஸ்…
ஆன் ஃபிங்கர்ஸ் முழுமுழுக்க ஜோனத் மாதிரிதான் வேணும்…என்ன ஒரு நீள ஃபிங்கர்ஸ்…..அடுத்த விஷயம் லெக்ஸ் அவன மாதிரி உயரமாய் வேணும்……இவள மாதிரி வேண்டாம்……சோ எல்லாமே அவன மாதிரியே இருந்தா அது எப்படி உன் குழந்தைனு தோணுமாம்…? இப்போ மனசுக்குள் ஒரு கேள்வி….அதான அப்ப எது என்னை மாதிரி இருந்தா ஓகேவா இருக்கும்….ம்…குழந்தை பையானா பொண்ணா அது தெரிஞ்சா இதெல்லாம் யோசிக்க வசதியா இருக்கும்….சற்று நேரம் அனைத்தையும் மறந்து சுகத்தின் பிடியில் இருந்தவள் காரணமின்றி இயல்புக்கு திரும்பினாள்.
இப்பொழுது அழுகை அழுகையாக வந்தது….முழுபைத்தியம் நான்……
அழுது கொண்டிருந்தவள் ஏதோ உறைக்க நிமிர்ந்து பார்த்தால் எதிரில் அவள் மனதுக்குரியவன். ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தான். இன்னைக்கு கிளம்ப வேண்டுமே…
அவனைப் பார்த்ததும் அமர்ந்திருந்த நிலையிலே தலையை குனிந்து கொண்டவள், மெல்ல கண்களை துடைத்துக் கொண்டாள். ஆனாலும் இவள் அழுதது அவனுக்கு தெரிந்திருக்கும். அருகில் வந்தவன் கவனம் அவள் கை அருகில் இருந்த மொபைலுக்குச் செல்ல அதை எடுத்துப் பார்த்தான். வல்லராஜன் நம்பர்.
“இந்த நாய் உனக்கு எதுக்கு கால் பண்ணான்? அவனால தான் அழுதுகிட்டு இருக்கியா?” இது உறுமலுக்கு ஒத்து வரும் குரல்.
விளக்கம் சொல்லவில்லை எனில் ஜோனத் அந்த வல்லராஜனிடம் சண்டைக்குப் போவது சர்வ நிச்சயம். ஆக வாயை திறந்து பதில் சொன்னாள்.
“இல்ல…அப்டில்லாம் எதுவும் இல்ல….ஏதோ ப்ராஜக்ட்னு ஆரம்பிச்சார்….நான் ரிசைன் பண்றேன்னு சொன்னேன்….வந்து சீக்ரம் ரெசிக்னேஷன் கொடுத்துட்டுப் போக சொன்னார்.”
“அதெல்லாம் தனியா போக வேண்டாம்…அவருக்கு இப்ப என்ன அவசரம்? நான் வரவும் போனா போதும்…சேர்ந்து போவோம்…” கிட்டதட்ட இது கட்டளைதான்.
“ப்ளீஸ் ஜோனத்….போய் குடுத்துட்டு வந்துடுறேனே….இல்லனா அத காரணமா வச்சு ஃபோன் பண்ணி ப்ராஜக்ட் ப்ராஜக்ட்னு உயிரை எடுப்பார்….சீக்கிரம் இந்த ஆள், இந்த சேனல் எல்லாத்தையும் மறக்கனும்னு நினைக்கிறேன்…எனக்கு நிம்மதி வேணும் ப்ளீஸ்”
இப்பொழுது அவன் முகத்தில் கனிவு வந்திருந்தது.
“உன் நிம்மதிதான் இங்க முக்கியம்….கண்டிப்பா போய்ட்டு வா….என்ன ப்ராப்ளம்னாலும்…….” அவன் சொல்லிக் கொண்டு போக
“அரண் அண்ணாவ கூப்டனும் அப்டித்தானே…..நான் தேவைனா திரியேகன் அங்கிளைக் கூட கூப்பிடுகிடுவேன்…” இவள் சொல்ல வந்தது நீ என்ன பத்தி பாதர் பண்ணாம நிம்மதியா போய்ட்டு வா என்ற அர்த்தத்தில் தான்.
அவனோ கிண்டல் தொனியில் “கல்யாணம் செய்துட்டதால என்னைத்தான் கழட்டி விட்டுட்ட, அவங்களயாவது அக்சப்ட் செய்துறுக்கியே அதுவரைக்கும் சந்தோஷம்” என்றவன் அடுத்து எதையோ சொல்லத் தொடங்க அதற்குள் அவள் முகம் போனப்போக்கில் பேச்சை நிறுத்திவிட்டான்.
அவன் ஓங்கி அறைந்திருந்தால் கூட அப்படி இருந்திருக்காது சங்கல்யாவுக்கு…. கல்யாணம் செய்துட்டு கழட்டிவிடுறதா? இவளா? இதை இவள் இப்படி யோசிக்கவில்லையே….மருண்டு கொண்டு போனது முகம், அடைந்து கொண்டு போனது சுவாசம்….அந்த 12 வயதில் பாட்டி கிடந்த படுக்கையும் இவளுமாக வீடிழந்து தெருவில் நின்றது கண்ணில் தெரிய, இருண்டு கொண்டு போனது பார்வை.
மீண்டும் அவளுக்கு சுயநினைவு வரும் போது “லியாபொண்ணு ப்ளீஸ்டா….கண்ண திறந்துக்கோ….உன்ன இப்படி விட்டுட்டு நான் எப்படி கிளம்புவேன்…ப்ளீஸ்மா….நான் சொன்னதுல உனக்கு எது பிடிக்கலைனு சொல்லு…..இனி நான் அப்படி பேசவே மாட்டேன்…..ஆனா இப்போ விழிச்சுக்கோ…” தவிப்போடு கெஞ்சிக் கொண்டிருந்தது ஜோனத்தின் குரல்.
மெல்ல உறைக்கிறது ஐயோ அவன் இன்னைக்கு கிளம்பனும்…. விழித்துப் பார்த்தாள். ஹாஸ்பிட்டலில் இவள். அவன் கிளம்ப வேண்டிய நாளில் காலையிலிருந்து இரவு வரை அத்தனை மணிநேரம் மயக்கத்திலிருந்திருக்கிறாள். அவன் நிம்மதியக் கெடுக்கனும்னே பிறந்தளோ இவள்? எவ்வளவு சீக்கிரம் இவனைப் பிரிகிறாளோ அத்தனையாய் அவனுக்கு நல்லது.
எல்லாம் அந்த பன்னீர்செல்வத்தால வந்தது….ஆனா கடைசில இவளும் அந்தாளப் போலத்தான்….கல்யாணம் செய்துட்டு கழட்டிவிட்டுட்டுப் போகப் போறா... கண்ணில் அதுவாக தண்ணீர் கொட்டுகிறது.
அடுத்த அரை மணி நேரத்தில் அரண் காரை செலுத்த இவள் ஜோனத்துடன் ஏர்போர்ட் நோக்கிப் பயணம்.
அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தபடி தன்னிடம் எதெல்லாமோ பேசிக் கொண்டிருக்கும் தன்னவனைப் பார்த்திருக்கிறாள். அவன் சொல்லும் எதுவும் இவள் மூளைக்கு செல்லவே இல்லை. வாயசைக்கும் ஊமைப் படம் போல் அவன் இவள் கண்களில். ஆனால் அவனது கண்ணில் தெரியும் அந்த காதலும் கன்சர்னும் மட்டும் புரிகிறது….கொல்கிறது அது அவளை…
ஏர்போர்ட். இவர்களுக்கு தனிமை கொடுத்து அரண் காரிலிருந்து இறங்கிக் கொண்டான்.
“கிளம்புறேன் லியாப் பொண்ணு……விஷ் மீ ஆல் த பெஸ்ட்” ஜோனத் கேட்க,
அத்தனை மணி நேரத்திற்குப் பின் வாயைத்திறந்தாள்.
“இல்ல சொல்ல மாட்டேன்…..லாஸ்ட் டைம் சொன்னேன்…..கடைசில நீங்க எதுக்காக திரும்பி வர வேண்டியதாச்சு பாருங்க…”