கடைய விட்டுட்டு அக்கா எங்க போயிடுச்சு….? செண்பக அக்கா ..அழைத்தாள் மனோகரி ..பதில் வரவில்லை ..கதவை திறந்து பார்க்க அது உள்ளே பூட்டியிருந்தமையால் திறக்க வில்லை .
உள்ள பூட்டிட்டு கடைய மூடாமா என்ன பண்றீங்க ...? கேட்டாள் மனோகரி கொட்டிய மழை சத்தம் இவள் சொல்வது அக்காவிற்கு கேட்குமா ...?
இந்த மழை வேற ச்ச என்று சலித்தவள் காதில் பா....பெ ..பெ ...அபே ..அபே ..பே என்று தாறுமாறாய் செண்பகத்தின் குரல் போல் கேட்க அக்கா ..அக்கா ..என்று இவள் கதவை தட்ட கதவு திறக்காததால்.இல்லத்தின் பக்கவாட்டு ஜன்னலை திறந்தாள் ..
வாயிற் கதவை தாளிட்ட காமுகன் ..ஜன்னல் கதவை தாளிட்டு இருந்திருந்தால் மனோ அக்கொடூரத்தை கண்டிருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ை…… மிருக வதை நிகழ்ந்திருந்தது ...!!!
கருணையின் இடமான பிள்ளையின் மனம் இறுகி இருந்தது ...ஏனோ மனோவிற்கு பரிதாபம் ஏற்பட வில்லை ..மாறாக சிரித்தாள் மனோகரி….விரக்தி சிரிப்பு.. ஒருவித வெறி சிரிப்பு ..கண்கள் வெறித்து இருந்தன ...பார்வை அரிவாள் மனையில் சொட்டிய குருதியில் நிலை குத்தி இருந்தது ..