அழுதுகொண்டே கதவை திறந்தாள் ஊமை செண்பகா ...கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள் மனோகரி ...பெ ..பே பெ என்று ஊமை மொழியில் அவளை அவ்விடம் விட்டு உடனே போய் விடுமாறு சொன்னாள் செண்பகம் ...
இல்லை நான் போக மாட்டேன் என்றாள் மனோ...
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் மனோ நீ நல்லா வாழ வேண்டிய பொண்ணு இங்க நீ இருந்தா உன் வாழ்க்கை தேவையில்லாம நாசம் ஆயிடும் ..நீ போ ..யார் என்ன கேட்டாலும் சரி இங்க நடந்த எதையும் நீ பாக்கலை ..நீ இன்னிக்கு இங்க வரவே இல்லை புரியுதா ..? நீ போ என்று தன் பே பே மொழியில் அவள் கூற மனோவோ அக்கா நான் போயிட்டா நீங்க ...? என்று சொல்ல
மின்னிய ஒளி கொண்ட பார்வையில் அவளை கட்டி அணைத்து சொன்னாள் செண்பகம் ..நான் தற்கொலை பண்ணிக்க மாட்டேன் உன் மேல சத்தியம்
...
This story is now available on Chillzee KiMo.
...
பறவை முத்திரை பதித்தது……. மனோகரி இவள் உன்னவள் உனக்கானவள் என்று… அதை உணர்ந்திட கூடாது ஆதி என்று சரணை கொன்று பெண் மீது வெறுப்பை கொடுத்திருந்தது இந்த ஆட்டம்… அதை மீறியும் கண்டான் அவளை…. கண்டவுடன் காதல் கொண்டான்……….ஆனால் அவன் உணரவில்லை…. ஆட்டம் உணர்ந்தது அங்கே சற்று நடுங்கித்தான் போனது ஆட்டம் ..